ADDED : மே 25, 2026 06:30 PM
அ நிறம் | அளவு
கோவை: கோவையில் அறிவொளி தங்கச்சுடர்கள் நுால் வெளியீட்டு விழா, கீதா ஓட்டல் அரங்கில் நடந்தது. அறிவொளிச்சுடர்கள் அமைப்பின் தலைவர் மோகன்தாஸ் தலைமை வகித்தார்.
தமிழக முன்னாள் கூடுதல் தலைமை செயலாளர் சங்கர் நுாலை வெளியிட்டு பேசுகையில், ‘‘இன்றைய சமூக சூழலில் நிறைய மாற்றம் ஏற்பட்டுள்ளது. கோவையை பொறுத்தவரை அரசு கொண்டு வரும் எந்த திட்டமாக இருந்தாலும் சிறப்பாக செய்து முடிக்க முடியும். அதற்கு இங்குள்ள மக்களின் ஆதரவும், ஒத்துழைப்பும்தான் காரணம்,’’ என்றார்.
