/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கதவை உடைத்து ரூ.1 லட்சம் திருட்டு
/
கதவை உடைத்து ரூ.1 லட்சம் திருட்டு
ADDED : ஜூன் 11, 2024 01:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை:சிங்காநல்லுார் அருகே வீட்டின் கதவை உடைத்து, ரூ.1 லட்சம் திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடுகின்றனர்.
திருச்சி ரோடு, சிங்காநல்லுார் அடுத்து வசந்தாமில் பஸ் ஸ்டாப் அருகே அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் கார்மெல் வேணுகோபால். இவர் தனது மனைவியுடன், மகளை பார்ப்பதற்காக கடந்த ஏப்., 12ம் தேதி அமெரிக்கா சென்றார்.
இந்நிலையில், இவரது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, வீட்டில் இருந்த ரூ.1 லட்சம் திருட்டுப்போனது. நண்பர் நந்தகோபால் அளித்த புகாரின் பேரில், சிங்காநல்லுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.