sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

தடம் மாறியது பஸ்; தப்பினர் பயணியர்

/

தடம் மாறியது பஸ்; தப்பினர் பயணியர்

தடம் மாறியது பஸ்; தப்பினர் பயணியர்

தடம் மாறியது பஸ்; தப்பினர் பயணியர்


ADDED : பிப் 24, 2025 01:02 AM

Google News

ADDED : பிப் 24, 2025 01:02 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போத்தனூர்; கோவை, மதுக்கரையை கடந்து அரசு டவுன் பஸ் (தடம் எண்: 48) ஒன்று, 76 பயணியருடன் குனியமுத்தூர் நோக்கி. பாலக்காடு தேசிய நெடுஞ்சாலையில் நேற்று காலை வந்துகொண்டிருந்தது. காந்தி நகரை அடுத்து மைல்கல் போலீஸ் சோதனை சாவடிக்கு முன்பாக இரு சக்கர வாகனம் ஒன்று திடீரென சாலையின் வலதுபுறம் வந்தது. இதனை கண்ட டிரைவர் சின்னதடாகத்தை சேர்ந்த சுகனேஸ்வர் பஸ்சை வலதுபுறம் திருப்பினார். எதிர்பாராவிதமாக பஸ் சாலையின் மையத்தடுப்பின் மீது ஏறி நின்றது.

அதிர்ச்சியடைந்த பயணியர் பஸ்சிலிருந்து இறங்கினர். இதனால் அவ்வழியே சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பயணியர் அவ்வழியே வந்த பஸ்களில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

மதுக்கரை போலீசார் விசாரணையில், வேலந்தாவளத்திலிருந்து காலை, 7:00 மணிக்கு புறப்பட்ட பஸ், 7:40 மணிக்கு மேற்குறிப்பிட்ட இடத்தில் வரும்போது, இரு சக்கர வாகன ஓட்டியால் விபத்து ஏற்பட்டதும், அதிர்ஷ்டவசமாக பயணியர் காயமின்றி தப்பியதும் தெரிந்தது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.






      Dinamalar
      Follow us