sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பசுமைக்குடில், நிழல்வலை கூடாரத்துக்கு மானியம்  தோட்டக்கலைத்துறை  விவசாயிகளுக்கு அழைப்பு

/

பசுமைக்குடில், நிழல்வலை கூடாரத்துக்கு மானியம்  தோட்டக்கலைத்துறை  விவசாயிகளுக்கு அழைப்பு

பசுமைக்குடில், நிழல்வலை கூடாரத்துக்கு மானியம்  தோட்டக்கலைத்துறை  விவசாயிகளுக்கு அழைப்பு

பசுமைக்குடில், நிழல்வலை கூடாரத்துக்கு மானியம்  தோட்டக்கலைத்துறை  விவசாயிகளுக்கு அழைப்பு


ADDED : ஜூலை 17, 2024 04:02 PM

Google News

ADDED : ஜூலை 17, 2024 04:02 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி: 'பொள்ளாச்சியில், பசுமைக்குடில் மற்றும் நிழல்வலை கூடாரங்கள் அமைக்க தோட்டக்கலைத்துறை வாயிலாக மானியம் வழங்கப்படுகிறது,' என, வடக்கு தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

பொள்ளாச்சி வடக்கு வட்டாரத்தில், தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ், பசுமைக்குடில் மற்றும் நிழல்வலை கூடாரங்கள் தேவைப்படும் விவசாயிகளுக்கு தோட்டக்கலைத்துறை வாயிலாக வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தில், 2023-24ம் ஆண்டு முதல் பசுமைக்குடில் அமைக்க, 56 சதவீத மானியத்தில், 2,000 சதுரமீட்டர் பரப்பளவில், 8 லட்சத்து, 90 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்தின் வாயிலாக, பசுமைக்குடில் அமைக்க, 455 ரூபாய் ஒரு சதுர மீட்டருக்கு என, ஒரு பயனாளிக்கு அதிகபட்சம், 4,000 சதுரமீட்டருக்கு வழங்கப்படுகிறது.

கடந்தாண்டு, பொள்ளாச்சி வடக்கு வட்டாரத்தில் தாளக்கரை கிராமத்தில் பாலமுரளிகிருஷ்ணன் என்பவர், 2,000 சதுர மீட்டரில் பசுமைக்குடில் அமைத்து, வீரிய ரக வெள்ளரி சாகுபடி செய்து வருகிறார். 120 நாட்களில், 60 மெட்ரிக் டன் மகசூல் எடுக்கும் நோக்கத்தில் சாகுபடி செய்து வருகிறார். இதை பொள்ளாச்சி வடக்கு வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் ராதாகிருஷ்ணன் பார்வையிட்டார்.

இது குறித்து, உதவி இயக்குனர் கூறியதாவது:

பசுமைக்குடில் அமைக்க தோட்டக்கலைத்துறை வாயிலாக மானியம் வழங்கப்படுகிறது. பசுமைக்குடில் அமைத்து உயர் தொழில்நுட்ப சாகுபடி செய்யும் போது, தட்ப வெப்பநிலை காரணிகளால் ஏற்படும் மகசூல் இழப்பை தடுக்கலாம்.

மேலும், நோய், பூச்சி தாக்குதலில் இருந்து பயிர்களை பாதுகாப்பதுடன், மகசூல் அதிகமாக கிடைக்கும். சொட்டுநீர் பாசனம் அமைத்து அதன் வாயிலாக நீர் மற்றும் உர மேலாண்மை செய்யும் போது குறைவான நீர் மற்றும் அதிகப்படியான மகசூல் கிடைக்கும்.

பசுமைக்குடிலில் வீரிய ரக தக்காளி, மிளகாய், வெள்ளரி மற்றும் ஜெர்பரா, ஜிப்சோபில்லா, ஆர்க்கிட்ஸ், சாமந்தி போன்ற பூக்களை வளர்த்து அதிக லாபம் பெறலாம். எனவே, விவசாயிகள் இத்திட்டத்தை தோட்டக்கலைத்துறை வாயிலாக பயன்பெற, வடக்கு தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு, அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us