/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பெண் டாக்டருக்கு மெழுகுவர்த்தி அஞ்சலி
/
பெண் டாக்டருக்கு மெழுகுவர்த்தி அஞ்சலி
ADDED : ஆக 20, 2024 12:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை;கோல்கட்டாவில் நடந்த பெண் டாக்டர் கொலைக்கு, நீதி கேட்டு டாக்டர்கள், பல்வேறு அமைப்பினர், சமூக ஆர்வலர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அவருக்கு அஞ்சலியும் செலுத்தி வருகின்றனர். அந்த வகையில், கோவையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் 'வாய்ஸ் ஆப் கோவை' அமைப்பினர் நேற்று ரேஸ்கோர்ஸ் தெற்கு தாசில்தார் அலுவலகம் முன், மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.
இந்த மெழுகுவர்த்தி அஞ்சலி, மாலை 5:00 முதல், 7:00 மணி வரை நடந்தது. குழந்தைகள், பெண்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் அஞ்சலி செலுத்தினர்.