sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

வாக்கிங் செல்வோரை மறித்த 'ரீல்ஸ்' மது போதையில் கார், பைக் ரேஸ்! மக்களை அலறவிடுவோர் அலறும் நேரம் வந்தாச்சு

/

வாக்கிங் செல்வோரை மறித்த 'ரீல்ஸ்' மது போதையில் கார், பைக் ரேஸ்! மக்களை அலறவிடுவோர் அலறும் நேரம் வந்தாச்சு

வாக்கிங் செல்வோரை மறித்த 'ரீல்ஸ்' மது போதையில் கார், பைக் ரேஸ்! மக்களை அலறவிடுவோர் அலறும் நேரம் வந்தாச்சு

வாக்கிங் செல்வோரை மறித்த 'ரீல்ஸ்' மது போதையில் கார், பைக் ரேஸ்! மக்களை அலறவிடுவோர் அலறும் நேரம் வந்தாச்சு


ADDED : செப் 07, 2024 01:49 AM

Google News

ADDED : செப் 07, 2024 01:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை;'வாக்கிங்' செல்லும் பொது மக்கள் தங்களின் புகார்களை தெரிவிக்க வசதியாக, ரேஸ்கோர்ஸ் போலீசார் 'வாட்ஸ் அப்' எண் அறிமுகப்படுத்தியுள்ளனர்.

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் தினமும் காலை, மாலை வேலைகளில் ஆயிரக்கணக்கானோர் வாக்கிங், உடற்பயிற்சி மேற்கொள்கின்றனர். இங்கு, கல்லுாரி மாணவர்கள், இளைஞர்கள், வேலைக்கு செல்வோர் என ஆயிரக்கணக்கானோர் தினசரி வந்து செல்கின்றனர். வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் மக்கள் திரண்டு வருவது வழக்கம்.

சமீப காலமாக ரேஸ்கோர்ஸ் பகுதிக்கு வரும், பொது மக்களின் மன நிம்மதியை கேடுக்கும் வகையிலும், வாக்கிங் செல்வோருக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாகவும், சிலர் நடந்து கொள்கின்றனர்.

முக்கியமாக, ரீல்ஸ் மோகத்தில் உள்ள இளைஞர்கள், நடைபாதையை மறைத்து வீடியோ எடுக்கின்றனர். நடைபாதையின் நடுவில் நின்று, செல்பி, வீடியோ எடுக்கின்றனர்.

சிறுவர்கள் விளையாடுவதற்காக அமைக்கப்பட்டுள்ள விளையாட்டு உபகரணங்களை பெரியவர்கள், காதல் ஜோடிகள் ஆக்கிரமித்துக் கொள்கின்றனர்.

மதுபோதையில் வரும் பலர், நடைபாதையில் இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிடுகின்றனர். போதையில் ரேஸ் நடத்துகின்றனர். இதனால், அமைதியாக வாக்கிங் வரும் பொதுமக்கள், கடும் அவதி அடைகின்றனர்.

இந்நிலையில், இது குறித்து போலீசில் புகார் அளிக்க வசதியாக, ரேஸ்கோர்ஸ் சுற்றிலும் 20 இடங்களில் விழிப்புணர்வு பலகைகள் வைத்துள்ளனர். வாட்ஸ் அப் எண் அறிமுகப்படுத்தியுள்ளனர்.

இது குறித்து, ரேஸ்கோர்ஸ் போலீஸ் இன்ஸ்., அர்ஜூன் குமார் கூறுகையில், ''சமீபகாலமாக ரேஸ்கோர்ஸ் பகுதியில் மதுபோதையில் வாகனம் இயக்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ரேஸ்கோர்ஸ் சுற்றி வேகமாக வாகனம் ஓட்டி, விபத்து ஏற்படுத்துகின்றனர்.

இரவு நேரங்களில் மதுபோதையில், ரேஸ்கோர்ஸ் நடைபாதைக்கு வரும் நபர்கள், வாக்கிங் செல்வோர் மற்றும் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்துகின்றனர்.

கடந்த சில நாட்களாக, ரேஸ்கோர்ஸ் போலீஸ் மற்றும் போக்குவரத்து போலீசார் இணைந்து இப்பகுதியில் மதுபோதையிலும், அதிவேகமாகவும் வாகனம் இயக்கியவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சுமார் 15 இரு சக்கர வாகனங்களை, பறிமுதல் செய்துள்ளோம். பொது மக்கள் எளிதாக புகார் அளிக்க வசதியாக, 94981 01144 என்ற வாட்ஸ் ஆப் எண்ணில், படத்துடன் புகார் அனுப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.






      Dinamalar
      Follow us