/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'லோக்அதாலத்' விசாரணைக்கு வழக்கு பரிந்துரை
/
'லோக்அதாலத்' விசாரணைக்கு வழக்கு பரிந்துரை
ADDED : மார் 06, 2025 06:18 AM
கோவை; கோவை மாவட்டத்தில், வரும் 8ம் தேதி நடைபெறும் தேசிய 'லோக்அதாலத்' விசாரணைக்கு, ஆயிரகணக்கான வழக்குகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், தேசிய 'லோக்அதலாத்' விசாரணை, கோவை, மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, வால்பாறை, மதுக்கரை, சூலுார் மற்றும் அன்னுார் ஆகிய நீதிமன்ற வளாகங்களில், வரும் 8ம் தேதி நடைபெறுகிறது.
நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்குகளில், சமரசம் செய்யக்கூடிய சிறு குற்ற வழக்குகள், காசோலை மோசடி, வாகன விபத்து இழப்பீடு, நில ஆர்ஜிதம், சிவில் வழக்குகள், விற்பனை வரி, வருமான வரி, தொழிலாளர் மற்றும் குடும்ப நலன் உள்ளிட்ட வழக்குகள், விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படுகின்றன.
லோக்அதாலத்தில், சமரச தீர்வு காண விரும்புவோருக்கு, சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலகத்தில் சிறப்பு அமர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதில், பல்வேறு நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள ஆயிரக்கணக்கான வழக்குகள் பரிந்துரைக்கு பிறகு, சிறப்பு அமர்வில் விசாரணைக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன.