/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கழிவுகளில் உணவு தேடும் கால்நடைகள்; பிளாஸ்டிக் கவரை உட்கொள்வதால் ஆபத்து
/
கழிவுகளில் உணவு தேடும் கால்நடைகள்; பிளாஸ்டிக் கவரை உட்கொள்வதால் ஆபத்து
கழிவுகளில் உணவு தேடும் கால்நடைகள்; பிளாஸ்டிக் கவரை உட்கொள்வதால் ஆபத்து
கழிவுகளில் உணவு தேடும் கால்நடைகள்; பிளாஸ்டிக் கவரை உட்கொள்வதால் ஆபத்து
ADDED : பிப் 23, 2025 11:53 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சியில், குப்பை கழிவுகளில் கால்நடைகள் உணவு தேடும் போது, பிளாஸ்டிக்கை உட்கொள்வதால், அவற்றுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
பொள்ளாச்சி நகரம் மற்றும் கிராமப்புறங்களில், ரோடுகளில் சுற்றித்திரியும் கால்நடைகள் ரோட்டோரம் உள்ள புற்களை உண்டு பசியாற்றி வருகின்றன. எங்கே உணவு கிடைக்கும் என கூட்டம் கூட்டமாக கால்நடைகள் ரோட்டில் வலம் வருகின்றன.
ஒரு சில இடங்களில், மாடு உள்ளிட்ட கால்நடைகள், குப்பை கழிவுகளில் வீசப்படும் அழுகிய காய்கறி உள்ளிட்ட உணவு பொருட்களை உட்கொள்ளும் அவல நிலை உள்ளது.
ரோட்டோரம் குப்பையோடு குப்பையாக கிடக்கும் கழிவுகளை சாப்பிடுவதோடு, பாலித்தீன் கழிவுகளையும் உட்கொள்கின்றன. உணவுக்குழாயில் பாலித்தீன் கழிவுகள் அடைத்துக் கொண்டால், கால்நடைகள் உயிரிழக்கும் அபாயமும் உள்ளது.
சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
பொள்ளாச்சியில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தக்கூடாது என விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், அதன் பயன்பாடு குறையவில்லை.
பொருட்கள் வாங்கிச்செல்லும் பிளாஸ்டிக் கவர்களை தரம் பிரித்து துாய்மை பணியாளர்களிடம் வழங்குவதில்லை. அவற்றை, குப்பையோடு குப்பையாக ரோட்டோரம் வீசுகின்றனர்.
அவற்றில் உள்ள உணவை உட்கொள்ள முயற்சிக்கும் கால்நடைகள், பிளாஸ்டிக் கவர்களையும் சேர்த்து விழுங்குகின்றன. அதன்பின் ஏற்படும் உடல் உபாதைகளால் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகின்றன.
இது குறித்து, பலமுறை விழிப்புணர்வு ஏற்படுத்தியும், பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை தவிர்க்க யாரும் முன்வருவதில்லை. மேலும், கால்நடை வளர்ப்போரும் மேய்ச்சலுக்கு விட்டு சென்று விடுகின்றனர். அவை, பிளாஸ்டிக் கவரை உட்கொள்வதை கவனிப்பதில்லை.
கால்நடை வளர்ப்போரும் கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடும் போது, கவனம் செலுத்த வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.

