sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

குடிநீர் குழாயில் உடைப்பு: போக்குவரத்தில் மாற்றம்

/

குடிநீர் குழாயில் உடைப்பு: போக்குவரத்தில் மாற்றம்

குடிநீர் குழாயில் உடைப்பு: போக்குவரத்தில் மாற்றம்

குடிநீர் குழாயில் உடைப்பு: போக்குவரத்தில் மாற்றம்


ADDED : மே 21, 2024 12:53 AM

Google News

ADDED : மே 21, 2024 12:53 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போத்தனூர்;சுந்தராபுரத்திலிருந்து போத்தனூர் செல்லும் சாரதா மில் சாலையில், அம்ருத் திட்டத்தில் பில்லூர் குடிநீர் திட்ட பிரதான குழாய் போடப்பட்டுள்ளது. தற்போது இச்சாலையில் பாதாள சாக்கடை பணி நடக்கிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம் குழாயில் தண்ணீர் விடப்பட்டு, சோதனை நடந்துள்ளது. அப்போது ராஜமுத்தையா நகர் பஸ் ஸ்டாப் அருகே, குழாயிலிருந்து தண்ணீர் வெளியேறியது.

போத்தனூர் மார்க்கமாக சுமார், 150 மீட்டர் தூரத்திற்கு தண்ணீர் ஓடை போல சென்றது. அப்பகுதி முழுவதும் சாலை சேறும், சகதியுமாக மாறியது.

குடிநீர் வடிகால் வாரியத்தினர் மேற்கொண்ட சோதனையில், பாதாள சாக்கடை பணியின்போது குழாய் உடைக்கப்பட்டது தெரியவந்தது.

இதுகுறித்து, பாதாள சாக்கடை பணி மேற்கொள்ளும் நிறுவனத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நேற்று காலை தொழிலாளர்கள், உடைப்பை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதனால் இவ்வழியே, கார், ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்கள் மட்டும் சென்று வந்தன. இருப்பினும் வாகன நெரிசல் ஏற்பட்டதால், போக்குவரத்து போலீசார் வாகனங்களை ஒழுங்குபடுத்தி அனுப்பினர்.

இன்றும் பணி நடக்கும் என்பதால், கனரக வாகனங்கள் மாற்று பாதைகளில் செல்லவேண்டும் என, போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.






      Dinamalar
      Follow us