sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கோவை மாவட்டத்துக்கான கண்காணிப்பு அலுவலர் மாற்றம்

/

கோவை மாவட்டத்துக்கான கண்காணிப்பு அலுவலர் மாற்றம்

கோவை மாவட்டத்துக்கான கண்காணிப்பு அலுவலர் மாற்றம்

கோவை மாவட்டத்துக்கான கண்காணிப்பு அலுவலர் மாற்றம்


ADDED : ஆக 02, 2024 12:06 AM

Google News

ADDED : ஆக 02, 2024 12:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:கோவை மாவட்ட கண்காணிப்பு அலுவலராக இருந்த, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்தொகை அரசு செயலர் ஜெயஸ்ரீ, சென்னைக்கு மாற்றப்பட்டார்.

கோவை மாவட்ட கண்காணிப்பு அலுவலராக இருந்தவர், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்தொகை அரசு செயலர் ஜெயஸ்ரீ. இவர், குறிப்பிட்ட கால இடைவெளியில் கோவை வந்து, வளர்ச்சி பணிகள் செயல்படுத்துவது தொடர்பாக ஆய்வு செய்வார். மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களுக்குச் சென்று, அரசு துறைகள் மூலம் மேற்கொள்ளப்படும் பணிகளை நேரில் ஆய்வு செய்து, அலுவலர்களிடம் கேட்டறிவார். பின், துறை தலைவர்களுக்கு அறிவுரை வழங்கிச் செல்வார்.

கடந்த, 31ம் தேதி வால்பாறைக்கு சென்ற அவர், பன்னிமேடு செல்லும் சாலையில் மண் சரிவு ஏற்பட்டதில், வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த இருவர் உயிரிழந்த பகுதிக்குச் சென்று, குடும்ப உறுப்பினர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

இந்நிலையில், அவர், சென்னை மாவட்டத்துக்கு கண்காணிப்பு அலுவலராக மாற்றப்பட்டார். இவருக்கு பதிலாக, மனித வள மேம்பாட்டுத்துறை செயலாளர் நந்தகுமார், கோவை மாவட்ட கண்காணிப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us