sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா நிறைவு

/

மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா நிறைவு

மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா நிறைவு

மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா நிறைவு


ADDED : மே 03, 2024 11:15 PM

Google News

ADDED : மே 03, 2024 11:15 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிணத்துக்கடவு;கிணத்துக்கடவு, கோவில்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட காளியண்ணன்புதூர் மீனாட்சி அம்மன் உடனமர் சுந்தரேஸ்வரர் கோவிலில், சித்திரை திருவிழா நிகழ்ச்சி கடந்த ஏப்., 28ம் தேதி, வாஸ்து சாந்தி பூஜையுடன் துவங்கியது.

ஏப்., 29ம் தேதி, திருஆபரண பெட்டி மற்றும் சக்தி கலசம் அழைத்து வருதல் நடந்தது. 30ம் தேதி, சுவாமிக்கு மாவிளக்கு வழிபாடும், தொடர்ந்து சுவாமி திருக்கல்யாண உற்சவமும் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.

அன்று மதியம், பூவோடு எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. இரவு, சக்தி கலசம் கங்கையில் சேர்த்தல் நிகழ்ச்சி நடந்தது. கடந்த, 1ம் தேதி, காலை, மதுரை வீரன் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.

கடந்த, 2ம் தேதி, காலை, மஞ்சள் நீராடுதல் மற்றும் சுவாமி திரு வீதி உலா நடந்தது. நேற்று, 3ம் தேதி, காலை, சுவாமிக்கு மஹா அபிஷேகம் மற்றும் திருஆபரண பெட்டி ஊர் கவுண்டர் தோட்டம் சேருதல் நிகழ்ச்சியுடன், சித்திரரை திருவிழா நிறைவு பெற்றது.






      Dinamalar
      Follow us