sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

வாடலை கட்டுப்படுத்தும் 'கோகோகான்' கலவை

/

வாடலை கட்டுப்படுத்தும் 'கோகோகான்' கலவை

வாடலை கட்டுப்படுத்தும் 'கோகோகான்' கலவை

வாடலை கட்டுப்படுத்தும் 'கோகோகான்' கலவை


ADDED : ஜூன் 20, 2024 05:01 AM

Google News

ADDED : ஜூன் 20, 2024 05:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை : தென்னை மரங்களில், வாடல் நோயை கட்டுப்படுத்த, வேளாண் பல்கலை., யின், கோகோகான் தாய் கலவையை பயன்படுத்தலாம் என தோட்டக்கலைத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

இக்கலவையை பயன்படுத்தும் முறை குறித்து தோட்டக்கலைத்துறையினர் கூறியதாவது:

கோகோகான் தாய் கலவையை நேரடியாக மரத்திற்கு பயன் படுத்தக்கூடாது. 200 லிட்டர் தண்ணீர் டேங்கில்,10 கிலோ நாட்டு சர்க்கரை, 5 லிட்டர் தயிர், சமையல் உப்பு ஆகியவற்றை, 150 லிட்டர் நீரில் நன்கு கலக்க வேண்டும். பின்னர், கோகோகான் தாய் கலவையை சேர்த்து, சுத்தமான மூங்கில் கம்பு கொண்டு, 10 நிமிடங்கள் நன்கு கலக்க வேண்டும்.

இதனை, சாக்கு பையினால் மூடி, நிழல் பாங்கான இடத்தில், 5 முதல், 7 நாட்கள் வளர்க்க வேண்டும். ஒரு வாரம் கழித்து, இந்த கலவையிலிருந்து, 2 லிட்டர் எடுத்து, அதனுடன் 8 லிட்டர் தண்ணீர் சேர்த்து, வேர்ப்பகுதி நன்கு நனையுமாறு வட்டப்பாத்தியில் ஊற்ற வேண்டும்.

இம்முறையை, இரண்டு, மூன்று மாத இடைவெளியில், தொடர்ந்து கடை பிடிக்க வேண்டும். இதில் மீதமுள்ள கரைசலை தாய்க்கரைசலாக கொண்டு, மீண்டும், மீண்டும் விவசாயிகளே உற்பத்தி செய்து கொள்ளலாம்.

இக்கலவையை பயன்படுத்துவதால், வாடல் நோயை கட்டுப்படுத்த முடியும்.

இவ்வாறு, அத்துறையினர் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us