sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

நிலைக்கட்டணமும், நிலையில்லா உயர்வும் கோவை தொழில்துறையினர் முதல்வரை சந்தித்து முறையிட முடிவு

/

நிலைக்கட்டணமும், நிலையில்லா உயர்வும் கோவை தொழில்துறையினர் முதல்வரை சந்தித்து முறையிட முடிவு

நிலைக்கட்டணமும், நிலையில்லா உயர்வும் கோவை தொழில்துறையினர் முதல்வரை சந்தித்து முறையிட முடிவு

நிலைக்கட்டணமும், நிலையில்லா உயர்வும் கோவை தொழில்துறையினர் முதல்வரை சந்தித்து முறையிட முடிவு


ADDED : ஜூலை 18, 2024 10:24 PM

Google News

ADDED : ஜூலை 18, 2024 10:24 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:''மின்கட்டண உயர்வும், அதை விட, நிலை கட்டணமும் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறு, குறு தொழில்கள் அழியும் நிலையை உருவாக்கியுள்ளது. நிலை கட்டணத்தை முன்புள்ள நிலைக்கு குறைக்க வேண்டும்,'' என, கோவையில் நடந்த தொழில்கள் கூட்டமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.

கொடிசியா தலைவர் கார்த்திக், தென்னிந்திய இன்ஜினியரிங் உற்பத்தியாளர் சங்கத் தலைவர் மிதுன் ராம்தாஸ், தமிழ்நாடு மின் நுகர்வோர் சங்கத் தலைவர் பிரதீப் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:

கோவையில் உள்ள ஐம்பதுக்கும் மேற்பட்ட சிறு, குறு, நடுத்தர தொழில் சங்கங்களில் கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் நடந்தது. சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். மின் கட்டண உயர்வு தொடர்பாக முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேச உள்ளோம். ஏற்கனவே முதல்வர் உறுதி அளித்தபடி கோரிக்கைகளை கேட்டு பரிசீலனை செய்வார் என்ற நம்பிக்கையுடன் உள்ளோம்.

நிலைக்கட்டணத்தை பொறுத்தவரை 430 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. தொழிற்சாலை ஓடினாலும் ஓடாவிட்டாலும் இந்த நிலை கட்டணத்தை செலுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது. தற்போதுள்ள சூழ்நிலையில் பல சிறு, குறு தொழிற்சாலைகளில் ஒரு ஷிப்ட் ஓட்டுவதற்கான ஆர்டர்கள் கூட இல்லை. இந்நிலையில், நிலைக்கட்டணமாக மாதம்தோறும் குறிப்பிட்ட தொகை செலுத்துவது சிரமம். நிலைக்கட்டணத்தை முன்பு உள்ள நிலைக்கு குறைக்க வேண்டும்.

சொந்தமாக வீடுகளுக்கோ தொழிற்சாலைகளுக்கோ சோலார் பேனல்கள் அமைக்க மத்திய அரசு மானியம் வழங்கி வருகிறது. துாய்மையான, இயற்கையான முறையில், எவ்வித சுற்றுச்சூழலுக்கும் கேடு விளைவிக்காத வகையில் பெறும் சோலார் மின் உற்பத்தியை அரசு ஊக்குவிக்க வேண்டும். மாறாக தமிழக அரசு சூரிய ஒளி மின்சாரத்திற்கு நெட்வொர்க்கிங் சார்ஜ் ஆக யூனிட்டுக்கு ஒரு ரூபாய் கட்டணமாக நிர்ணயித்துள்ளது. இந்தக் கட்டணத்தையும் தற்போது உயர்த்தி உள்ளது. இதை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

.






      Dinamalar
      Follow us