sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கோவை வாலிபர் கேரளாவில் தவிப்பு

/

கோவை வாலிபர் கேரளாவில் தவிப்பு

கோவை வாலிபர் கேரளாவில் தவிப்பு

கோவை வாலிபர் கேரளாவில் தவிப்பு


ADDED : செப் 08, 2024 11:35 PM

Google News

ADDED : செப் 08, 2024 11:35 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:கேரளாவில் தவித்து வரும் கோவை வாலிபரை, குடும்பத்தினரிடம் ஒப்படைக்க போலீசார் முயற்சி செய்து வருகின்றனர்.

கோவை சேர்ந்த, 30 வயது வாலிபர் கடந்த, 4 மாதங்களுக்கு முன் கேரள மாநிலம் கோழிக்கோட்டில் சுற்றித்திரிந்துள்ளார். அங்கிருந்த பொதுமக்கள், அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

சிகிச்சை பெற்று வந்த அவர், தற்போது சிறிதளவு குணமடைந்தார். மருத்துவமனை நிர்வாகம் இதுகுறித்து, கோழிகோடு உளவுத்துறை போலீசாருக்கு தகவல் தெரிவித்தது. போலீசார் மருத்துவமனைக்கு சென்று அந்த வாலிபரிடம் விசாரித்தனர்.

அதில் அவர், தனது பெயர் மணிகண்டன் என்றும் கோவை காந்திபுரம், உக்கடம் பகுதியில் வசிந்து வந்ததாகவும் தெரிவித்துள்ளனர். தனது தந்தை பெயர் சேகர், டிரைவர், தாயார் பிள்ளையம்மாள், சகோதரர் மணிமாலை, டெய்லர் எனவும் கூறியுள்ளார்.

ஆனால் அவரால் முழு விவரங்களை தெரிவிக்க முடியவில்லை. உளவுத்துறை போலீசார் கோவை போலீசாரை அணுகினர். கோவை போலீசார் அதுபோன்ற இளைஞர் மாயம் தொடர்பான புகார் ஏதும் வரவில்லை என்று தெரிவித்துள்ளனர். இரு மாநில போலீசாரும் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us