/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மழை வேண்டி கூட்டுப்பிரார்த்தனை
/
மழை வேண்டி கூட்டுப்பிரார்த்தனை
ADDED : மே 02, 2024 11:30 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி:பொள்ளாச்சி - பாலக்காடு ரோடு, ஆர்.சி., சர்ச் வணிக வளாக கடை உரிமையாளர்கள் சார்பில், மரக்கன்றுகள் நடும் விழா மற்றும் மழை வேண்டி கூட்டுப்பிரார்த்தனை நடந்தது.
கோவை துடியலுார் அருகே, பொண்ணுாத்தம்மன் மலை சிவனடியார் ஸ்ரீ ராஜ மகரிஷி சுவாமி, பொள்ளாச்சி - பாலக்காடு ரோடு ஆர்.சி., சர்ச் பங்கு தந்தை ஜேக்கப் அடிகளார் ஆகியோர் பங்கேற்று, விழாவை துவக்கி வைத்தனர். தொடர்ந்து, பாலக்காடு ரோட்டில், சர்ச் வணிக வளாகம் முன்பாக, 15 மரக்கன்றுகள் நடப்பட்டன. மழை வேண்டி கூட்டுப்பிரார்த்தனை செய்யப்பட்டது.