ADDED : ஏப் 23, 2024 02:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை:தஞ்சாவூர் திருவிடை மருதுாரை சேர்ந்தவர் சக்ரபாணி, 38; இவர் கோவை பீளமேட்டில் தங்கி அங்குள்ள தனியார் கல்லுாரியில் கடந்த, 2 ஆண்டுகளாக பேராசிரியராக பணிபுரிந்து வந்தார். கருத்து வேறுபாடு காரணமாக அவரது மனைவி சக்ரபாணியை பிரிந்து சென்றார்.
இதனால் அவர் மன ரீதியாக பாதிக்கப்பட்டார். கும்பகோணத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஒரு மாதத்துக்கு முன் மீண்டும் கோவை திரும்பிய அவர் பணிக்கு சென்று வந்தார்.
நேற்று முன்தினம் வீட்டில் இருந்த அவர், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பீளமேடு போலீசார் அவரது உடலை மீட்டு இ.எஸ்.ஐ., மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

