ADDED : ஜூன் 15, 2026 05:11 PM
அ நிறம் | அளவு
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவில் இரவு நேரத்தில் மொபைல்போன் பார்த்த கணவரை, மனைவி திட்டியதால் கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கிணத்துக்கடவு, கிருஷ்ணசாமிபுரத்தை சேர்ந்தவர் செந்தில்குமார், 38, கட்டட தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் இரவு நேரவு, வீட்டின் வெளியே அமர்ந்து மொபைல்போன் பார்த்துக் கொண்டிருந்தார். இதை கண்ட அவரது மனைவி கோகிலா திட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த செந்தில்குமார், வீட்டில் உள்ள தனது அறையில், பேனில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நீண்ட நேரம் ஆகியும் கதவை திறக்காததால் சந்தேகம் அடைந்த மனைவி, உறவினர்கள் உதவியுடன் கதவை உடைத்து பார்த்தபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. கிணத்துக்கடவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
