sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பணியின் போது கீழே விழுந்து கட்டட தொழிலாளி உயிரிழப்பு

பணியின் போது கீழே விழுந்து கட்டட தொழிலாளி உயிரிழப்பு

பணியின் போது கீழே விழுந்து கட்டட தொழிலாளி உயிரிழப்பு


ADDED : மார் 05, 2025 03:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 05, 2025 03:28 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

கோவை:சிங்காநல்லுார் பகுதியில் வேலை செய்து கொண்டிருக்கும் போது, 15 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்ததில், கட்டட தொழிலாளி உயிரிழந்தார்.

ரத்தினபுரி, சுப்பாத்தாள் லே அவுட் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார், 47; கட்டட தொழிலாளி. மணிகண்டன் என்பவருடன் இருகூர், ராம் நகர் பகுதியில் உள்ள, சிவசங்கர் என்பவரது குடோனில் வேலைக்கு சென்றார்.

குடோனின் கூரையை கழற்றும் பணியில், செல்வகுமார் ஈடுபட்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக கீழே விழுந்தார்.

தலை, கால் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. தனியார் மருத்துவமனையில் அவரை பரிசோதித்த டாக்டர்கள், அறுவை சிகிச்சைக்கு அதிக செலவாகும் என தெரிவித்துள்ளனர்.

இதனால், அவரது குடும்பத்தினர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம் அவர் உயிரிழந்தார்.சிங்காநல்லுார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us