/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநகராட்சி மேயர் ராஜினாமா: கவுன்சிலர்கள் கூறுவதென்ன?
/
மாநகராட்சி மேயர் ராஜினாமா: கவுன்சிலர்கள் கூறுவதென்ன?
மாநகராட்சி மேயர் ராஜினாமா: கவுன்சிலர்கள் கூறுவதென்ன?
மாநகராட்சி மேயர் ராஜினாமா: கவுன்சிலர்கள் கூறுவதென்ன?
ADDED : ஜூலை 04, 2024 05:16 AM
கோவை: கோவை மேயர் கல்பனா, நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். இதுகுறித்து கவுன்சிலர்கள் கூறுவதென்ன?
ராமமூர்த்தி, மா.கம்யூ.,: அவரது ராஜினாமாவுக்கான காரணம், தலைமைக்குத்தான் தெரியும். கட்சிக்குள் பிரச்னையா என்பது தெரியவில்லை. இதுகுறித்து தற்போது எதுவும் தெரிவிக்க முடியாது.
சித்ரா வெள்ளிங்கிரி, ம.தி.மு.க.,: மேயராக தேர்ந்தெடுக்கப்படுபவர், ஐந்து ஆண்டுகள் பதவி வகித்தால், மக்களுக்கு நல்லது செய்ய முடியும். இவ்வாறு இடையில் ராஜினாமா செய்வதால், புதிதாக பொறுப்பு ஏற்பவர்களுக்கும் ஒரு தயக்கம் ஏற்படும். இதனால், மாநகராட்சி வளர்ச்சி பின்தங்கி விடும்.
ஷர்மிளா, அ.தி.மு.க.,: இந்த ராஜினாமா அவரது செயல்பாடற்ற தன்மையால் நிகழ்ந்தது. இதிலேயே அனைத்தும் அடங்கி விடும்.
பிரபாகரன், அ.தி.மு.க.,: இது, சம்பாதித்ததை அவர்களுக்குள் பங்கு போட்டுக் கொள்வதில் ஏற்பட்ட பிரச்னையால் நடந்தது. போட்டி போட்டுக் கொண்டு, அவர்களது கட்சித் தலைமைக்கு புகார் அளித்து, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வைரமுருகன், தி.மு.க.,: உடல்நலம், குடும்பசூழல் காரணமாக ராஜினாமா செய்வதாக மேயர் தெரிவித்துள்ளார். அதை தலைமையும் ஏற்றுக் கொண்டுள்ளது. கோவை மாநகராட்சியை இதைவிட சிறப்பான ஒன்றாக மாற்ற, தலைமை திட்டமிட்டு இருக்கலாம்.
கதிர்வேல், தி.மு.க.,: என்ன காரணம் என்பது, இன்னும் தெளிவாக தெரியவில்லை. புதிதாக வருபவர்கள் எதையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை. அனைவருக்கும் அனுபவம் உள்ளது. சிறப்பாக செயல்படுவார்கள்.