sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

இரிடியத்தை வெளிநாட்டில் கோடிக்கணக்கில் விற்கலாம் என மோசடி செய்த தம்பதி  கைது

/

இரிடியத்தை வெளிநாட்டில் கோடிக்கணக்கில் விற்கலாம் என மோசடி செய்த தம்பதி  கைது

இரிடியத்தை வெளிநாட்டில் கோடிக்கணக்கில் விற்கலாம் என மோசடி செய்த தம்பதி  கைது

இரிடியத்தை வெளிநாட்டில் கோடிக்கணக்கில் விற்கலாம் என மோசடி செய்த தம்பதி  கைது


ADDED : ஜூலை 31, 2024 10:50 PM

Google News

ADDED : ஜூலை 31, 2024 10:50 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:'வெளிநாட்டிற்கு இரிடியம் ஏற்றுமதி செய்து, கோடிகளில் லாபம் ஈட்டலாம்' என மோசடி செய்த தம்பதியரை, போலீசார் கைது செய்தனர்.

சென்னை, எண்ணுாரை சேர்ந்த சீனிவாசன் என்பவருக்கு, அவரது நண்பரான கன்னியாகுமரியை சேர்ந்த ஆன்ட்ரோ வில்சன் வாயிலாக, கோவை இடிகரையை சேர்ந்த சியாம் ஜாய் மோகன், 44, அறிமுகமானார்.

ஜாய் மோகன் மற்றும் அவரது மனைவி சஜிதா, 38, ஆகியோர் தங்களிடம், விலை மதிப்பற்ற இரிடியம் இருப்பதாக, சீனிவாசனை நம்ப வைத்துள்ளனர். இதனை வெளிநாட்டில் விற்றால், கோடிக்கணக்கில் சம்பாதிக்கலாம் எனவும் ஆசைவார்த்தை கூறியுள்ளனர்.

தொடர்ந்து, இரிடியத்தை சோதனை செய்வதற்காக, அறிவியல் நுட்பம் தெரிந்த சேகர் என்பவரை அறிமுகம் செய்து வைத்து, சோதனை செய்ய சீனிவாசனிடம், 10 லட்சம் ரூபாயையும் மூவரும் பெற்றுள்ளனர்.

பின்னர், ஜாய் மோகன் மூலம் வெளிநாட்டு நிறுவனத்தில் வேலை செய்வதாக அறிமுகமான வருண்பிரசாத் ரெட்டி, ரவீந்திர பிரசாத், அருண்குமார் மற்றும் ஆனந்த வெங்கடேசன் ஆகியோர், தங்கள் நிறுவனத்தில் பலகோடி ரூபாய்க்கு விற்றுக்கொடுப்பதாக கூறி, சீனிவாசனிடமிருந்து மேலும், 15 லட்சம் ரூபாய் பெற்றுள்ளனர்.

பின்னர், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சீனிவாசன், கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளிக்க, விசாரணையும் நடந்து வந்தது.

இந்நிலையில், ஜாய் மோகன், அவரது மனைவி சஜிதா ஆகியோரை கைது செய்து, இரிடியம், 4 லட்சத்து 99,000 ரூபாய் ரொக்கம் மற்றும் 77 கிராம் தங்க நகைகளை, போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us