sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பயறு வகை பயிரிட்டால் நல்ல வருமானம் பெறலாம்

/

பயறு வகை பயிரிட்டால் நல்ல வருமானம் பெறலாம்

பயறு வகை பயிரிட்டால் நல்ல வருமானம் பெறலாம்

பயறு வகை பயிரிட்டால் நல்ல வருமானம் பெறலாம்


ADDED : ஜூன் 20, 2024 11:16 PM

Google News

ADDED : ஜூன் 20, 2024 11:16 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்னுார்:கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தில், பசூர் கிராமம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இங்கு பண்ணை பள்ளி முதல் வகுப்பு நேற்று முன்தினம் நடந்தது. வேளாண் அலுவலர் சுகன்யா தலைமை வகித்து பேசுகையில், பயறு வகைகள் பயிரிட்டால் நல்ல வருமானம் பெறலாம், என்றார்.

காரமடை வேளாண் அறிவியல் நிலையத்தின் சுரேஷ்குமார் பேசுகையில், பயறில் புதிய அதிக விளைச்சல் தரக்கூடிய ரகங்கள் உள்ளன. உரிய பருவத்தில் அவற்றை பயிரிட வேண்டும். விதை நேர்த்தி செய்வதன் வாயிலாக பயிர் விளைச்சல் அதிகரிக்கும், என்றார்.

தேசிய உணவு பாதுகாப்பு திட்ட ஆலோசகர் மாரியப்பன் பேசுகையில், நுண்ணுயிர் உரங்களை, ரைசோடியம், டிரைகோ டெர்மா விரிடி, அசோஸ்பைரில்லம் போன்றவற்றால் பயிர்கள் நோய் பாதிப்பின்றி அதிக விளைச்சல் தரும், என்றார். உதவி விதை அலுவலர் வினோத்குமார் பேசுகையில், விதைப்பண்ணை அமைத்து வருமானம் பெறலாம், என்றார். ஆதார விதை முதல் சான்று விதை வரையிலான விதைகளின் விபரங்களை எடுத்துக் கூறினார்.

உதவி வேளாண் அலுவலர் பூபாலன், அட்மா உதவி தொழில்நுட்ப மேலாளர் பிரபு, முனுசாமி ஆகியோர் பேசினர். திரளான விவசாயிகள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us