sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கல்லுாரிக்கு வந்தவுடன் சைபர் க்ரைம் 'பாடம்'

/

கல்லுாரிக்கு வந்தவுடன் சைபர் க்ரைம் 'பாடம்'

கல்லுாரிக்கு வந்தவுடன் சைபர் க்ரைம் 'பாடம்'

கல்லுாரிக்கு வந்தவுடன் சைபர் க்ரைம் 'பாடம்'


ADDED : ஜூலை 09, 2024 11:51 PM

Google News

ADDED : ஜூலை 09, 2024 11:51 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை;கோவை அரசு கலைக்கல்லுாரியில், முதலாமாண்டு பயிலும் மாணவர்களுக்கு, சைபர் க்ரைம் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, கல்லுாரி அரங்கில் நேற்று நடந்தது.

நிகழ்ச்சிக்கு, தமிழ் துறைத்தலைவர் பூங்கொடி தலைமை வகித்தார். அரசியல் அறிவியல் துறைத்தலைவர் கனகராஜ் முன்னிலை வகித்தார்.

சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, ரேஸ்கோர்ஸ் போலீஸ் இன்ஸ்பெக்டர் அர்ஜுன்குமார் பேசியதாவது:

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்களின் பாதுகாப்புக்கு அதிக அளவு முக்கியத்துவம் அளித்து வருகிறார்.

குறிப்பாக, கல்லுாரி மாணவிகளின் பாதுகாப்புக்காக 'போலீஸ் அக்கா' என்ற திட்டத்தை துவக்கி, செயல்படுத்தி வருகிறார்.

கல்லுாரிகளில் உளவியல் மற்றும் பாலியல் ரீதியாக, மாணவிகள் சந்திக்கும் பிரச்னைகளை பெற்றோரிடம், கல்லுாரி நிர்வாகத்திடம் கூற முடியாத நிலையில் உள்ளனர்.

இது போன்ற சூழ்நிலையில், மாணவிகள் கல்லுாரிக்கு என, நியமிக்கப்பட்ட பெண் போலீசாரிடம் தைரியமாக தெரிவிக்கலாம். உடனே நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு, அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us