/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசு பஸ்சில் இருக்கைக்கு கீழ் சேதம்; பயணியர் அச்சம்
/
அரசு பஸ்சில் இருக்கைக்கு கீழ் சேதம்; பயணியர் அச்சம்
அரசு பஸ்சில் இருக்கைக்கு கீழ் சேதம்; பயணியர் அச்சம்
அரசு பஸ்சில் இருக்கைக்கு கீழ் சேதம்; பயணியர் அச்சம்
ADDED : செப் 02, 2024 02:07 AM

ரோட்டோர குப்பை
பொள்ளாச்சி, விஜயாபுரம், வி.என்.டி., நகர் செல்லும் ரோட்டின் ஓரத்தில், அதிக அளவு குப்பை கொட்டப்பட்டுள்ளது. இதனால் அங்கு சுகாதார சீர்கேடு நிலவுவதுடன் துர்நாற்றம் வீசுகிறது. எனவே, நகராட்சி நிர்வாகம் சார்பில் இங்கு கொட்டப்படும் குப்பையை அகற்றம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- - யஷ்வந்த், பொள்ளாச்சி.
செடிகள் அகற்றப்படுமா
குளத்துப்பாளையம் - பட்டணம் செல்லும் ரோட்டின் இரண்டு புறத்திலும், அதிக அளவு செடிகள் முளைத்து ரோட்டை ஆக்கிரமித்துள்ளது. இதனால், பைக்கில் செல்பவர்கள் பலர் சிரமப்படுகின்றனர். இரவு நேரத்தில் செல்ல அச்சப்படுகின்றனர். இந்த ரோட்டின் ஓரத்தில் உள்ள புதர்களை அகற்ற வேண்டும்.
- - கண்ணன், கிணத்துக்கடவு.
பழுதடைந்த உபகரணங்கள்
செங்குட்டைபாளையம், அரசு துவக்கப்பள்ளி அருகே உள்ள மாணவர்கள் விளையாட்டு உபகரணங்கள் சேதம் அடைந்து விளையாட முடியாத நிலையில் துருப்பிடித்து உள்ளது. இதனால், மாணவர்கள் விளையாட்டு உபகரணங்களை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதை விரைவில் சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- -தம்பு, நெகமம்.
வீணாகும் மின்சாரம்
கிணத்துக்கடவு, சென்றாம்பாளையம் பிரிவு அருகே பகல் நேரத்தில் தெரு விளக்குகள் ஒளிர்ந்த நிலையில் உள்ளது. இதனால் மின்சாரம் விரையமாகும் நிலை ஏற்படுகிறது. இதை தவிர்க்க பகல் நேரத்தில் ஒளிரும் மின்விளக்குகளை கவனித்து முறையாக அணைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கார்த்தி, கிணத்துக்கடவு.
துார்வார வேண்டும்
உடுமலை ஸ்ரீ நகரில், மழை நீர் வடிகாலில், குப்பை, கழிவு நிறைந்து காணப்படுகிறது. இதனால், தண்ணீர் செல்ல முடியாமல் தேங்கும் நிலை ஏற்படுகிறது. எனவே, வடிகாலை துார்வார நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கந்தசாமி, உடுமலை.
-தெருவிளக்குகள் எரிவதில்லை
உடுமலை பூமாலை சந்து பகுதியில், இரவு நேரங்களில் தெருவிளக்குகள் எரியாமல் உள்ளது. மாலையில் குழந்தைகளை அவ்வழியாக அனுப்புவதற்கு பெற்றோர் அச்சப்படுகின்றனர். இருள் சூழ்ந்திருப்பதால், பலரும் குடியிருப்புகளின் அருகில் அமர்ந்துக்கொள்கின்றனர். தெருவிளக்குகள் எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- காயத்ரி, உடுமலை.
சுகாதாரம் பாதிப்பு
உடுமலை, கணக்கம்பாளையம் ரயில்வே கேட் அருகிலுள்ள பகுதிகளில் குப்பைக்கழிவுகள் சுத்தம் செய்யப்படுவதில்லை. திறந்த வெளியில் குப்பைக்கழிவுகள் குவிக்கப்படுகின்றன. இதனால் அப்பகுதியின் சுகாதாரம் முழுவதும் கேள்விக்குறியாகியுள்ளது.
- வாசுதேவன், உடுமலை.
புதர் மண்டிக்கிடக்கும் நீர்நிலை
உடுமலை - பழநி ரோட்டில், கழுத்தறுத்தான் பள்ளத்தில், செடிகள் வளர்ந்து புதர்மண்டிக்கிடக்கிறது. இதனால், கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாவதோடு, துர்நாற்றமும் வீசுகிறது. எனவே, இச்செடிகளை அகற்றி துார்வார நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- முருகன், உடுமலை.
இருள் சூழ்ந்த பகுதி
உடுமலை, ஏரிப்பாளையத்திலிருந்து தாராபுரம் ரோட்டை இணைக்கும் பகுதியில் மாலை நேரங்களில் இருள் சூழ்ந்துள்ளது. அப்பகுதியில் வசிக்கும் மக்கள் இரவில் நடந்து செல்வதற்கு அச்சப்படுகின்றனர். கூடுதல் தெருவிளக்குகள் அமைக்க எதிர்பார்க்கின்றனனர்.
- தேவராஜ், உடுமலை.
குறுகலான ரோடு
உடுமலை, மடத்துார் செல்லும் ரோடு குறுகலாக உள்ளது. இதனால் கனரக வாகனங்கள் செல்லும்போது மற்ற வாகனங்கள் செல்ல முடியாமல் இடையூறு ஏற்படுகிறது. ரோட்டை விரிவுபடுத்த பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
- சிவராமன், உடுமலை.
பஸ் சேதம்
பொள்ளாச்சியில் இருந்து, பிற ஊர்களுக்கு இயக்கப்படும் அரசு பஸ் உள் புறத்தில் பயணியர் அமரும் இருக்கைக்கு கீழ் வண்டி டயர் தெரியும் படி சேதம் அடைந்து உள்ளது. இதனால் பயணியர் அச்சப்படுகின்றனர். எனவே, போக்குவரத்துத்துறை சார்பில் பஸ்சில் சேதம் அடைந்த பகுதியை பயணியர் நலன் கருதி விரைவில் சீரமைப்பு செய்ய வேண்டும்.
-- சக்திவேல், பொள்ளாச்சி.