sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

சாலையில் பரவிய மணல் திட்டுகளால் ஆபத்து

/

சாலையில் பரவிய மணல் திட்டுகளால் ஆபத்து

சாலையில் பரவிய மணல் திட்டுகளால் ஆபத்து

சாலையில் பரவிய மணல் திட்டுகளால் ஆபத்து


ADDED : மே 10, 2024 10:38 PM

Google News

ADDED : மே 10, 2024 10:38 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம்;காரமடை அருகே அண்ணாநகரில், தேசிய நெடுஞ்சாலையில் சாலை முழுவதும் பரவி உள்ள மணல் திட்டுகளால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

கோவை மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில், காரமடை அருகே உள்ள அண்ணாநகர் பகுதியில் சாலை முழுவதும் ஆக்கிரமித்து, மணல் திட்டுகள் பரவி உள்ளது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையின் காரணமாக, மழை நீரில் அடித்து வரப்பட்ட மணல் சாலையில் சேர்ந்துள்ளன.

இந்த மணல் திட்டுகளை உடனே அகற்றி, விபத்துக்கள் ஏற்படாத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறுகையில், கோடை விடுமுறை என்பதால் ஊட்டிக்கு செல்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கோவை வழியாக ஊட்டி செல்வோர், இச்சாலை வழியாக தான் செல்கின்றனர்.

மணல் திட்டுக்கள் சாலை முழுவதும் பரவியுள்ளதால், இருசக்கர வாகனங்கள் செல்லும் போது சாலையில் வழுக்கி, கீழே விழுந்து சிறு, சிறு விபத்துக்கள் ஏற்படுகின்றன. கனரக வாகனங்கள் செல்லும் போது மணல் புழுதி வீசுகிறது. சிறிய ரக கார்கள் செல்லும் போது, பிரேக் அடித்தால் நிற்பதில்லை. நெடுஞ்சாலை துறையினர் உடனடியாக இந்த மணல் திட்டுகளை அகற்றி மக்களின் உயிர்களை காக்க வேண்டும், என்றனர்.---






      Dinamalar
      Follow us