sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

வியாபாரியின் உடல் உறுப்புகள் தானம்; அரசு மருத்துவமனை நிர்வாகம் மரியாதை

/

வியாபாரியின் உடல் உறுப்புகள் தானம்; அரசு மருத்துவமனை நிர்வாகம் மரியாதை

வியாபாரியின் உடல் உறுப்புகள் தானம்; அரசு மருத்துவமனை நிர்வாகம் மரியாதை

வியாபாரியின் உடல் உறுப்புகள் தானம்; அரசு மருத்துவமனை நிர்வாகம் மரியாதை


ADDED : மே 30, 2024 12:48 AM

Google News

ADDED : மே 30, 2024 12:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: அரசு மருத்துவமனையில், வியாபாரியின் உடல் உறுப்புகள் தானம் பெறப்பட்டது. அவரது உடலுக்கு மருத்துவமனை நிர்வாகம் சார்பில், மரியாதை செலுத்தப்பட்டது.

தர்மபுரி மாவட்டம் அரூரை அடுத்த மொப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் முனிராஜ், 46; இவருக்கு மனைவி, இரண்டு மகள்கள் உள்ளனர். முனிராஜ், குடும்பத்துடன் திருப்பூரில் தங்கி பால் வியாபாரம் செய்து வந்தார்.

கடந்த, 27ம் தேதி உடல்நிலை குறைவு காரணமாக, அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேல் சிகிச்சைக்காக, கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார்.

பரிசோதனையில், அவருக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு மூளைச்சாவு ஏற்பட்டிருப்பது தெரிந்தது. இதையடுத்து முனிராஜின் குடும்பத்தினர், அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வந்தனர்.

தொடர்ந்து, தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி முனிராஜின் கண்கள், கல்லீரல், சிறுநீரகம் ஆகியவை தானமாக பெறப்பட்டன.

அதில் கல்லீரல், ஓசூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கும், ஒரு சிறுநீரகம் மற்றும் கண்கள் கோவை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கும், மற்றொரு சிறுநீரகம் மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கும், அனுப்பி வைக்கப்பட்டது.

முனிராஜின் மனைவி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு மருத்துவமனை டீன் நிர்மலா, மருத்துவ மனை ஊழியர்கள் ஆறுதல் கூறி, உடலுக்கு மரியாதை செய்து அனுப்பி வைத்தனர்.






      Dinamalar
      Follow us