sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

இறந்தவர் வீட்டு கடனை செலுத்த காப்பீடு நிறுவனத்துக்கு உத்தரவு

/

இறந்தவர் வீட்டு கடனை செலுத்த காப்பீடு நிறுவனத்துக்கு உத்தரவு

இறந்தவர் வீட்டு கடனை செலுத்த காப்பீடு நிறுவனத்துக்கு உத்தரவு

இறந்தவர் வீட்டு கடனை செலுத்த காப்பீடு நிறுவனத்துக்கு உத்தரவு


ADDED : ஆக 03, 2024 06:45 AM

Google News

ADDED : ஆக 03, 2024 06:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை,: கொரோனா தொற்றால் இறந்தவர் வாங்கிய வீட்டு கடனை, காப்பீடு நிறுவனம் செலுத்த நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டது.

பொள்ளாச்சி, வெங்கடேஷா காலனியை சேர்ந்த முகமது ரபி என்பவர், பைனான்ஸ் நிறுவனத்தில், 9.55 லட்சம் ரூபாய் வீட்டு கடன் வாங்கினார். இதற்காக, கோடாக் மகேந்திரா லைப் இன்சூரன்ஸ் நிறுவனத்தில், 48,213 ரூபாய் செலுத்தி காப்பீடு செய்தார்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட முகமது ரபி, கோவை அரசு மருத்துமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி 2021, மே, 12 ல் இறந்தார்.

கொரோனா தொற்றால் அவர் இறந்ததாக, அரசு மருத்துவர்கள் சான்றிதழ் அளித்தனர். வீட்டு கடனை செலுத்த, காப்பீடு தொகை வழங்க கோரி, இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு அவரது மனைவி ஹசீனா விண்ணப்பித்தார். முகமது ரபிக்கு, 10 ஆண்டுகளாக இருந்த முன்நோய் காரணமாக இறந்ததாக கூறி, விண்ணப்பத்தை நிராகரித்தனர்.

கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் ஹசீனா வழக்கு தாக்கல் செய்தார். விசாரித்த ஆணைய தலைவர் தங்கவேல் மற்றும் உறுப்பினர்கள், 'கொரோனா தொற்று பாதிப்பால் இறந்தவர் வாங்கிய கடனுக்கான தொகை, 10.12 லட்சத்தை இன்சூரன்ஸ் நிறுவனம் செலுத்த வேண்டும். மன உளைச்சலுக்கு இழப்பீடாக, 15,000 ரூபாய், செலவு தொகை, 5,000 ரூபாய் வழங்க வேண்டும்,' என உத்தரவிட்டனர்.






      Dinamalar
      Follow us