sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

விலை உயர்ந்தும் மஞ்சள் சாகுபடி பரப்பு சரிவு

/

விலை உயர்ந்தும் மஞ்சள் சாகுபடி பரப்பு சரிவு

விலை உயர்ந்தும் மஞ்சள் சாகுபடி பரப்பு சரிவு

விலை உயர்ந்தும் மஞ்சள் சாகுபடி பரப்பு சரிவு


ADDED : ஜூலை 03, 2024 09:24 PM

Google News

ADDED : ஜூலை 03, 2024 09:24 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை : ஓராண்டு பயிரான மஞ்சள் திருப்பூர் மாவட்டத்தில் பொங்கலுார், காங்கேயம், திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வந்தது. வைகாசி பட்டத்தில் சாகுபடி செய்யும் மஞ்சள் தை மாதத்தில் அறுவடை செய்யப்படுகிறது.

மஞ்சளுடன் சின்ன வெங்காயம் ஊடுபயிராக சாகுபடி செய்யப்படுகிறது. கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக மஞ்சளுக்கு போதிய விலை கிடைக்கவில்லை. இதனால் மஞ்சள் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது. மேலும் மழை சரிவர பெய்யாமல் நிலத்தடி நீர்மட்டம் சரிந்து வருகிறது. தண்ணீர் பிரச்னை அதிகரித்துள்ளதால் படிப்படியாக மஞ்சள் சாகுபடி பரப்பு குறைந்து கொண்டே வந்தது.

பத்து ஆண்டுகளுக்குப் பின் இந்த ஆண்டு மஞ்சள் விலை பழைய நிலையை எட்டி உள்ளது. ஒரு குவின்டால் அதிகபட்சமாக, 17 ஆயிரம் ரூபாய்க்கு விலை போகிறது.

இருந்தும் தண்ணீர் பற்றாக்குறையால் மஞ்சள் சாகுபடி செய்யும் விவசாயிகளின் எண்ணிக்கை உயரவில்லை. தற்போது அத்தி பூத்தாற் போல ஒரு சில விவசாயிகள் மட்டுமே மஞ்சள் சாகுபடி செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us