sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

தேன் கொள்முதல் நிலையம் துவக்கணும் :இன்று உலக தேனீ தினத்தில் கோரிக்கை

/

தேன் கொள்முதல் நிலையம் துவக்கணும் :இன்று உலக தேனீ தினத்தில் கோரிக்கை

தேன் கொள்முதல் நிலையம் துவக்கணும் :இன்று உலக தேனீ தினத்தில் கோரிக்கை

தேன் கொள்முதல் நிலையம் துவக்கணும் :இன்று உலக தேனீ தினத்தில் கோரிக்கை


ADDED : மே 19, 2024 11:13 PM

Google News

ADDED : மே 19, 2024 11:13 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி:'உற்பத்தி செய்யப்படும் தேனை கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக கொள்முதல் நிலையம் துவங்கி கொள்முதல் செய்திட வேண்டும்,' என தேனீ வளர்ப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் விவசாயம் சார்ந்த தொழிலே பிரதானமாக உள்ளது. அதில், தேனீ வளர்ப்பில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

உலக தேனீ தினமான இன்று தேனி வளர்ப்போர், கோரிக்கைகளை வைத்து மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்றித்தர வலியுறுத்தியுள்ளனர்.

தேசிய தேனீ வாரிய உறுப்பினர் விவேக் கூறியதாவது: தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர், தேனீ வளர்ப்பு தொழில் செய்து வருகின்றனர்; இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட தேனீ வளர்ப்பு தொழிலாளர்கள் உள்ளனர். குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து அறுவடை செய்யக்கூடிய ரப்பர் தேன், இன்று வரை ஏற்றுமதி செய்ய முடியவில்லை.

மேலும், பல்வேறு வகையான தேன்களை பெற மாநிலம் முழுவதும் இடமாற்றம் செய்யும் போது, அங்கு விவசாயிகள் பயன்படுத்தும் ரசாயனம் மருந்தினால், தேனீ காலனி (தேனீ குடும்பம்) இறந்து விடுகிறது.

இதனால், தேனீ வளர்ப்போர் நஷ்டமடைகின்றனர். இதே நிலை நீடித்தால் தமிழகத்தின் தேனீ வளர்ப்பு தொழில் என்பது கேள்விக்குறியாகிவிடும். எனவே, மத்திய, மாநில அரசுகள், தேனீ வளர்ப்பு தொழிலை காக்க உதவிட வேண்டும்.

ரசாயனம் அதிகம் பயன்படுத்தக்கூடிய விளைநிலங்களில் இறக்கிற தேனீ குடும்பங்களுக்கு, விவசாயிகளின் விளைவிக்க கூடிய வாழை, தென்னை, மக்காச்சோளம் பயிர்களுக்கு வழங்குவது போன்று, காப்பீடு வழங்க வேண்டும்.

தேனீ வளர்ப்போர் இரவு நேரங்களில் தேனி காலநிலை இடம் விட்டு, இடம் மாற்ற எடுத்துச்செல்லும் போது பல்வேறு விபத்துகளும், விஷ பூச்சிகளின் ஆபத்து உள்ளது. எனவே, தேனீ வளர்ப்பாளர்களுக்கும் காப்பீடு வழங்கிட வேண்டும்.

மாநில அரசின் வாயிலாக, தேன் அதிகமாக உற்பத்தி செய்யக்கூடிய மாவட்டங்களில், கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக கொள்முதல் நிலையங்கள் துவங்கி தேனீ வளர்ப்போரிடம் இருந்து தேனை கொள்முதல் செய்திட வேண்டும்.

மேலும், இந்த சங்கங்கள் வாயிலாக, தேனீ வளர்ப்போருக்கு கடன் வழங்கிடவேண்டும். இரவு நேரங்களில் தேனீக்களை இடமாற்றம் செய்யும் போது பல்வேறு பிரச்னைகளை தேனீ வளர்ப்போர் சந்திக்கின்றனர்.

டோல்கெட் மற்றும் போலீசார் பரிசோதனை போன்ற காரணங்களினால் காலதாமதம் ஏற்படுகிறது. இப்பிரச்னையில் பாதுகாக்க தேனீ வளர்ப்போருக்கு அடையாள அட்டை வழங்கிட வேண்டும்.

மத்திய, மாநில அரசுகள், தேனீகளுக்கு ஆபத்து விளைவிக்க கூடிய ரசாயன மருந்துகள், உரங்கள் பயன்பாட்டை தடுக்க விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இன்று உலக தேனீ தினத்தில் எங்களது கோரிக்கைளை நிறைவேற்றிட அரசு முன்வர வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us