sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

குழப்பங்களை தீர்த்தது 'தினமலர்' வழிகாட்டி!

/

குழப்பங்களை தீர்த்தது 'தினமலர்' வழிகாட்டி!

குழப்பங்களை தீர்த்தது 'தினமலர்' வழிகாட்டி!

குழப்பங்களை தீர்த்தது 'தினமலர்' வழிகாட்டி!


ADDED : ஜூலை 06, 2024 08:45 PM

Google News

ADDED : ஜூலை 06, 2024 08:45 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'தெளிவான மனநிலை'

சஞ்சய்குமார், வடவள்ளி: இன்ஜினியரிங் கவுன்சிலிங் விண்ணப்பித்துள்ளேன். என்ன படிக்கலாம் என முடிவு செய்து இருந்தாலும், குழப்பான மனநிலையிலேயே இருந்தேன். இந்நிகழ்ச்சியில் பங்கேற்றதால், எந்த துறையை தேர்வு செய்யவேண்டும் என்ற தெளிவு கிடைத்தது.

'அரசு தேர்வுகள் அறிந்தோம்'

சதீஷ், கோவை: என் மகளை கோவையில் ஒரு கல்லுாரியில் தேர்வு செய்து படிக்க வைத்தால் போதும் என நினைத்தேன். ஆனால், சிறந்த கல்லுாரி கிடைத்தால் எங்கு சென்று வேண்டுமானலும் படிக்கவேண்டும் என்பதன் முக்கியத்துவம் புரிந்துகொண்டேன்.

'சந்தேகங்களுக்கு தீர்வு'

மோகனபிரவீனா, கருமத்தம்பட்டி: கல்லுாரிகளின் தரத்தை எவ்வாறு மதிப்பீடு செய்யவேண்டும், டயர் 1, டயர் 2 கல்லுாரிகளின் வேறுபாடு போன்றவற்றை தெரிந்து கொண்டேன். சாய்ஸ் தேர்வு செய்வது குறித்த, பல்வேறு சந்தேகங்களுக்கு விடை கிடைத்தது.

'தன்னம்பிக்கை பேச்சு'

லாவண்யா, காரமடை : சாய்ஸ் தேர்வில் எதுபோன்ற தவறுகள் நடக்கும், கவனக்குறைவால் என்னென்ன பிரச்னைகளை எதிர்கொள்ள நேரிடும் என்ற தகவல்கள், மாணவர்களுக்கு மட்டுமல்ல, பெற்றோருக்கும் பயனுள்ளதாக இருந்தது. கல்வியாளர் அஸ்வின் பேச்சு, தன்னம்பிக்கை அளித்தது.

'புரிதல் பிறந்தது'

வித்யா, கோவை: கல்லுாரி தேர்வு செய்வதன் முக்கியத்துவம் குறித்து தெளிவாக புரிந்துகொண்டேன். கேம்பஸ் இன்டர்வியூ, இன்டர்ன்ஷிப், திறன் மேம்பாடு, கூடுதல் சான்றிதழ் படிப்பு, வேலைவாய்ப்பில் தொழில்துறையினரின் எதிர்பார்ப்பு போன்றவற்றை அறிந்துகொண்டேன்.

'தவறை புரிந்துகொண்டேன்'

நிதர்ஷினி, துடியலுார்:என் வீட்டின் அருகிலேயே நான்கு கல்லுாரிகள் இருக்கிறது. அதில் ஒன்றை தேர்வு செய்து படிக்கலாம் என திட்டமிட்டு இருந்தேன். துாரமாக இருந்தாலும் நல்ல கல்லுாரிகளை தேர்வு செய்தால் மட்டுமே, எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என, இப்போது புரிந்து கொண்டேன்.






      Dinamalar
      Follow us