sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மாற்றுத் திறனாளிகள் 93 பேருக்கு கடன் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி வினியோகம்

/

மாற்றுத் திறனாளிகள் 93 பேருக்கு கடன் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி வினியோகம்

மாற்றுத் திறனாளிகள் 93 பேருக்கு கடன் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி வினியோகம்

மாற்றுத் திறனாளிகள் 93 பேருக்கு கடன் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி வினியோகம்


ADDED : ஆக 22, 2024 09:26 PM

Google News

ADDED : ஆக 22, 2024 09:26 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில், மாற்றுத் திறனாளிகள் 93 பேருக்கு கடன் வழங்கப்பட்டது.

கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியும், டில்லி, தேசிய மாற்றுத் திறனாளி நிதி மற்றும் வளர்ச்சி கழகம் சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கான கடன் வழங்கும் விழா, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைமையகத்தில் நடந்தது.

மத்திய கூட்டுறவு வங்கியின் சார்பில், 52 பேர், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் வாயிலாக 41 பேர் என, 93 பேருக்கு ரூ.1.38 கோடி மதிப்பில் கடன் வழங்கப்பட்டது.

தையல் கடை, கல்வி உபகரணப் பொருட்கள் கடை, துணி வியாபாரம் போன்ற சிறு, குறு தொழில்கள் மேற்கொள்ள, இக்கடன் வழங்கப்பட்டது.

கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குனர் பழனிசாமி, தேசிய மாற்றுத்திறனாளி நிதி மற்றும் வளர்ச்சி கழகத்தின் உதவி பொதுமேலாளர் சங்கர் சர்மா ஆகியோர் பயனாளிகளுக்கு உதவி வழங்கினர்.

பயன்படுத்த அழைப்பு


இவ்வங்கியில், தற்போது வாடிக்கையாளர்களிடமிருந்து பெறப்படும் நிரந்தர வைப்புகளுக்கு அதிகபட்சமாக, 8.30 சதவீதம் வட்டி வழங்குகிறது. மாற்றுத் திறனாளிகளிடமிருந்து பெறப்படும் வைப்புகளுக்கு கூடுதலாக 0.25 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.மகளிர் உரிமைத் தொகை, தமிழ் புதல்வன் மற்றும் புதுமைப் பெண் திட்டத்தில் தொகை பெறும் பயனாளர்களின் தொடர் வைப்புகளுக்கு 7.75 சதவீதம் வட்டி வழங்கப்படுவதால், பொதுமக்கள், வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அழைப்பு விடப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us