/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'பார்க்கிங்' பகுதியான சர்வீஸ் ரோடு போக்குவரத்து நெரிசலால் அதிருப்தி
/
'பார்க்கிங்' பகுதியான சர்வீஸ் ரோடு போக்குவரத்து நெரிசலால் அதிருப்தி
'பார்க்கிங்' பகுதியான சர்வீஸ் ரோடு போக்குவரத்து நெரிசலால் அதிருப்தி
'பார்க்கிங்' பகுதியான சர்வீஸ் ரோடு போக்குவரத்து நெரிசலால் அதிருப்தி
ADDED : ஜூலை 16, 2024 11:32 PM

கிணத்துக்கடவு;கிணத்துக்கடவு, சர்வீஸ் ரோட்டில் அதிக அளவு வாகனங்கள் 'பார்க்கிங்' செய்யப்படுவதால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
கிணத்துக்கடவு, சர்வீஸ் ரோட்டில் நாள் தோறும் அதிக அளவு வாகன போக்குவரத்து உள்ளது. சர்வீஸ் ரோட்டின் இரண்டு பகுதியிலும் ஏராளமான கடைகள், உணவகங்கள், வணிக வளாகம் மற்றும் அரசு அலுவலகங்கள் உள்ளன.
முகூர்த்த நாட்களில், சார் - பதிவாளர் அலுவலகத்தில் அதிகப்படியானோர் பத்திர பதிவு செய்ய வருகின்றனர். அவர்களின் நான்கு சக்கர வாகனங்கள் சர்வீஸ் ரோட்டின் இரண்டு புறங்களிலும் வரிசையாக பார்க்கிங் செய்யப்படுகிறது.
இதனால், போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. இந்த ரோட்டின் அதிகப்படியான வாகனங்கள் பார்க்கிங் செய்ய முடியாததால், போலீஸ் ஸ்டேஷன் செல்லும் வழி, அரசு மருத்துவமனை செல்லும் ரோடு, பேரூராட்சி அலுவலகம் ரோடு என அனைத்தும் பார்க்கிங் ஏரியாவாக மாறி வருகிறது.
இதனால், அப்பகுதியில் கடை வைத்திருப்பவர்கள் தங்கள் வாகனங்களை பார்க்கிங் செய்வதில் சிரமம் ஏற்படுகிறது. மேலும், நடைபாதையில் ஆக்கிரமிப்பு இருப்பதால், சர்வீஸ் ரோட்டில் நடந்து செல்லும் மக்கள் சிரமப்படுகின்றனர்.
எனவே, போக்குவரத்து நலன் கருதி சர்வீஸ் ரோட்டின் ஓரத்தில் நிறுத்தப்படும் வாகனங்களை கட்டுப்படுத்த போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.