sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

தி.மு.க.,பேனர் வைக்கும் பணியில் துாய்மை பணியாளர்களுக்கு வேலை; கலெக்டரிடம் பா.ஜ., புகார்

/

தி.மு.க.,பேனர் வைக்கும் பணியில் துாய்மை பணியாளர்களுக்கு வேலை; கலெக்டரிடம் பா.ஜ., புகார்

தி.மு.க.,பேனர் வைக்கும் பணியில் துாய்மை பணியாளர்களுக்கு வேலை; கலெக்டரிடம் பா.ஜ., புகார்

தி.மு.க.,பேனர் வைக்கும் பணியில் துாய்மை பணியாளர்களுக்கு வேலை; கலெக்டரிடம் பா.ஜ., புகார்


ADDED : மார் 04, 2025 06:23 AM

Google News

ADDED : மார் 04, 2025 06:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தொண்டாமுத்தூர்; கலிக்கநாயக்கன்பாளையத்தில், தி.மு.க., பேனர் வைக்கும் பணியில், பேரூராட்சி பணியாளர்கள் ஈடுபட்ட விவகாரத்தில், பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் பேரூராட்சி தலைவர் மீது, நடவடிக்கை எடுக்க கோரி, பா.ஜ.,வினர், கலெக்டரிடம் புகார் அளித்துள்ளனர்.

தாளியூர் பேரூராட்சிக்குட்பட்ட கலிக்கநாயக்கன்பாளையத்தில், கடந்த 28ம் தேதி, முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, தி.மு.க., சார்பில், பேனர் அடிக்கப்பட்டது. அந்த பேனர்களை வைக்கும் பணியில், பேரூராட்சி பணியாளர்கள் மற்றும் பேரூராட்சி வாகனம் பயன்படுத்தப்பட்டது.

இவ்விவகாரத்தில், பேரூராட்சி பணியாளர்களை, 4 நாட்கள் சஸ்பெண்ட் செய்து, செயல் அலுவலர் சீனிவாசன் உத்தரவிட்டார். இந்நிலையில், இவ்விவகாரத்தில், பேரூராட்சி தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் தங்களது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, கட்சி பேனர் வைக்க தூய்மை பணியாளர்களை பயன்படுத்தியுள்ளனர்.

இதில், தூய்மை பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர். ஆனால், பேரூராட்சி தலைவர், கவுன்சிலர்கள், செயல் அலுவலர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே, இதுகுறித்து விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பா.ஜ.,வினர் கலெக்டரிடம் புகார் அளித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us