sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மழைகாலத்தில் திறந்தவெளியில் கால்நடைகளை கட்டாதீங்க!

/

மழைகாலத்தில் திறந்தவெளியில் கால்நடைகளை கட்டாதீங்க!

மழைகாலத்தில் திறந்தவெளியில் கால்நடைகளை கட்டாதீங்க!

மழைகாலத்தில் திறந்தவெளியில் கால்நடைகளை கட்டாதீங்க!


ADDED : மே 23, 2024 04:40 AM

Google News

ADDED : மே 23, 2024 04:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள கால்நடை வளர்ப்போர் மற்றும் விவசாயிகள், மழைக்காலங்களில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து, கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

மழைக்காலங்களில் கால்நடைகளை, திறந்தவெளியில் கால்நடை மேய்ச்சலுக்காக அனுப்ப வேண்டாம். இடி மற்றும் மின்னல் ஏற்படும்போது திறந்தவெளியில் மாடுகளை கட்டக்கூடாது. உயர் மின்னழுத்த மின் கம்பிகள் செல்லக்கூடிய இடங்களுக்கு அருகில், கால்நடைகளை கொண்டு செல்லக்கூடாது.

மின்மாற்றி மற்றும் மின்கம்பங்களில் கால்நடைகளை கட்டக்கூடாது. தண்ணீர் தேங்கக்கூடிய தாழ்வான பகுதிகளில் இருந்து, கால்நடைகளை மேட்டுப்பாங்கான பகுதிக்கு உடனடியாக மாற்ற வேண்டும். கொட்டகையை நல்ல முறையில் பராமரிக்க வேண்டும். சுகாதாரமான தண்ணீர் மற்றும் தீவனம் வழங்க வேண்டும்.

கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து கால்நடை மருத்துவ நிலையங்களிலும் கால்நடைகளுக்கு தேவையான மருந்துகள், தடுப்பூசிகள், தாதுஉப்பு கலவை போதுமான அளவு இருப்பு இருக்கிறது.

இச்சேவையை கால்நடை வளர்ப்போர் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us