/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
துாண்டிலில் மாட்டாதீர் 'டான்ஜெட்கோ' எச்சரிக்கை
/
துாண்டிலில் மாட்டாதீர் 'டான்ஜெட்கோ' எச்சரிக்கை
ADDED : ஆக 18, 2024 01:26 AM
கோவை;தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில், 'எக்ஸ்' தளத்தில் வெளியிடப்பட்டுள்ள 'அலர்ட்' மெசேஜ்:
உங்கள் பழைய மாத மின் கட்டணம் சரி செய்யப்படாததால், இன்றிரவு மின் இணைப்பு துண்டிக்கப்படும். இதை சரி செய்ய  கீழே கொடுக்கப்பட்டுள்ள செயலியை செயல்படுத்தி, குறைந்த பட்சம் ரூ.03 அல்லது தகவல்களை தரவும் என குறுஞ்செய்தி வந்தால், அதை  பொருட் படுத்தாதீர்.
பதட்டப்படாமல், முதலில் உங்கள் மின் கட்டண நிலையை, மின்வாரிய அதிகாரப்பூர்வ இணையதளம், செயலியில் சரிபார்க்கவும்.
அந்த மோசடி செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டாம். அனுப்பிய எண்ணை  அழைக்க வேண்டாம். சைபர் குற்ற எண் 1930 ல் புகார் அளிக்கவும்.
இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

