sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

டிரைவர் - மாணவர் மோதல் நடுரோட்டில் பரபரப்பு

/

டிரைவர் - மாணவர் மோதல் நடுரோட்டில் பரபரப்பு

டிரைவர் - மாணவர் மோதல் நடுரோட்டில் பரபரப்பு

டிரைவர் - மாணவர் மோதல் நடுரோட்டில் பரபரப்பு


ADDED : மார் 02, 2025 11:28 PM

Google News

ADDED : மார் 02, 2025 11:28 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி, ; பொள்ளாச்சி அருகே, பஸ்சுக்கு வழிவிடாமல் கார் சென்ற நிலையில், காரில் வந்தவருக்கும், பஸ் டிரைவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

ஆனைமலை அருகே, ஒடையகுளத்தில் இருந்து பொள்ளாச்சிக்கு பயணியரை அழைத்துக்கொண்டு அரசு பஸ் வந்து கொண்டு இருந்தது. பஸ்க்கு முன்பாக, வழிவிடாமல் கார் சென்றது.

ஜமீன் ஊத்துக்குளி அருகே காரை மறித்து, பஸ்சை நிறுத்திய டிரைவர், ஏன் இப்படி கார் ஓட்டுகிறீர்கள் என கேள்வி எழுப்பினார்.அப்போது, காரில் வந்த கல்லுாரி மாணவர்கள் மூன்று பேர், டிரைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

வாக்குவாதம் முற்றியதுடன், கை கலப்பாக மாறியதையடுத்து, அவ்வழியாக வந்த அரசு பஸ்களும் நிறுத்தப்பட்டன. இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

சம்பவ இடத்துக்கு வந்த மேற்கு போலீசார், இருதரப்பிடம் பேச்சு நடத்தினர். இருவரும் சமாதானமாக சென்றதையடுத்து பிரச்னை முடிவுக்கு வந்தது.






      Dinamalar
      Follow us