sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

இ - நாம் திட்டம் விழிப்புணர்வு

/

இ - நாம் திட்டம் விழிப்புணர்வு

இ - நாம் திட்டம் விழிப்புணர்வு

இ - நாம் திட்டம் விழிப்புணர்வு


ADDED : ஆக 10, 2024 03:11 AM

Google News

ADDED : ஆக 10, 2024 03:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிணத்துக்கடவு;இ-- நாம் திட்டம் குறித்து, நெகமம் சுற்று வட்டாரத்தில் உள்ள விவசாயிகளுக்கு, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

நெகமம் ஒழுங்குமுறை விற்பனை கூடம் வாயிலாக, நெகமத்தை சுற்றியுள்ள கள்ளிப்பட்டி, என்.சந்திராபுரம், குரும்பபாளையம், வெள்ளாளபாளையம், ஆவலப்பம்பட்டி, மூலனூர், சின்ன நெகமம், ராசக்காபாளையம் போன்ற கிராமங்களில், 300கும் மேற்பட்ட விவசாயிகளிடம் இ - நாம் திட்டம், சோலார் உலர் களம், சேமிப்பு கிடங்கு வசதி, பொருளீட்டு கடன் போன்றவைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மேலும், பண்ணை வாயில் முறையில் விளை பொருட்களை, இ - நாம் திட்டத்தில், விற்பனை செய்து பயன் பெற தெரிவிக்கப்பட்டது.

தற்போது விற்பனை கூடத்தில், 5 ஆயிரத்து 117 விவசாயிகள் பதிவு செய்துள்ளனர். இதில், 317 விவசாயிகள், 979.146 மெட்ரிக் டன் அளவுக்கு விலை பொருட்களை, 1.90 கோடி ரூபாய்க்கு விற்று பயனடைந்துள்ளனர்.

எனவே, விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை, இ - நாம் திட்டத்தில் விற்று பயன் பெற, நெகமம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், தங்கள் ஆதார் கார்டு, பேங்க் பாஸ் புக் போன்ற ஆவணங்களின் நகல்களை கொண்டு இதில், பதிவு செய்ய வேண்டும். இதன் வாயிலாக பல விவசாயிகள் பயன் பெறுவார்கள்.

இத்தகவலை, நெகமம் விற்பனைக்கூட கண்காணிப்பாளர் ஜெயராம கிருஷ்ணன் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us