/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மின் நுகர்வோர் குறை தீர் கூட்டம்
/
மின் நுகர்வோர் குறை தீர் கூட்டம்
ADDED : ஆக 13, 2024 01:12 AM
கோவை;சீரநாயக்கன்பாளையம் மற்றும் ஒண்டிப்புதுார் மின் வாரிய அலுவலகங்களில், மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடக்கிறது.
சீரநாயக்கன்பாளையம் மின் வாரிய அலுவலகத்தில், காலை, 11:00 மணிக்கு நடக்கும் கூட்டத்தில், மேற்பார்வை பொறியாளர் (வடக்கு) விஜயகவுரி பங்கேற்கிறார்.
ஒண்டிப்புதுார் மின் வாரிய அலுவலகத்தில், காலை, 11:00 மணிக்கு நடக்கும் கூட்டத்தில், மேற்பார்வை பொறியாளர் (மாநகர்) சதீஷ்குமார் பங்கேற்கிறார்.
இந்த மின் வாரிய அலுவலகங்களுக்குட்பட்ட மின் நுகர்வோர், கூட்டத்தில் பங்கேற்று, மின்வாரியம் மற்றும் தங்கள் மின் இணைப்பில் உள்ள பிரச்னைகள் குறித்து நேரில் தெரிவித்து பயனடையலாம், என, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தெரிவித்துள்ளது.