/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மின் நுகர்வோர் குறை தீர் கூட்டம்
/
மின் நுகர்வோர் குறை தீர் கூட்டம்
ADDED : செப் 02, 2024 10:49 PM
கோவை;குனியமுத்துார் மற்றம் மாநகர் மின் வாரிய அலுவலகங்களில், மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடக்கிறது.
குனியமுத்துார் மின் வாரிய அலுவலகத்தில், காலை, 11:00 மணிக்கு நடக்கும் கூட்டத்தில், மேற்பார்வை பொறியாளர் (தெற்கு) சுப்ரமணியன் பங்கேற்கிறார்.
மாநகர் மின் வாரிய அலுவலகத்தில், காலை, 11:00 மணிக்கு நடக்கும் கூட்டத்தில், மேற்பார்வை பொறியாளர் (மாநகர்) சதீஷ்குமார் பங்கேற்கிறார்.
இந்த மின் வாரிய அலுவலகங்களுக்கு உட்பட்ட மின் நுகர்வோர், இக்கூட்டத்தில் பங்கேற்று தங்கள் மின் இணைப்பு உள்ளிட்ட மின் வாரியம் தொடர்பான புகார்களை, நேரில் தெரிவித்து பயனடையலாம்.
இத்தகவலை, செயற்பொறியாளர்கள் சுரேஷ் (குனியமுத்துார்), பசுபதீஸ்வரன் (மாநகர்) தெரிவித்துள்ளனர்.