sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

காப்பீடு தொகையை வாங்கித்தாங்க.. மாநகராட்சியில் மூதாட்டி முறையீடு

/

காப்பீடு தொகையை வாங்கித்தாங்க.. மாநகராட்சியில் மூதாட்டி முறையீடு

காப்பீடு தொகையை வாங்கித்தாங்க.. மாநகராட்சியில் மூதாட்டி முறையீடு

காப்பீடு தொகையை வாங்கித்தாங்க.. மாநகராட்சியில் மூதாட்டி முறையீடு


ADDED : மார் 13, 2025 06:18 AM

Google News

ADDED : மார் 13, 2025 06:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; பொதுமக்களிடம் குறைகேட்கும் கூட்டம், கோவை மாநகராட்சி அலுவலகத்தில் நடந்தது. மேயர் ரங்கநாயகி, துணை மேயர் வெற்றிச்செல்வன் ஆகியோர் மனுக்கள் பெற்றனர்.

அதில், சவுரிபாளையம் ஜி.ஆர்.ஜி., நகரை சேர்ந்த முதியவர் சீதாலட்சுமி (76) அளித்த மனுவில், 'கோவை மாநகராட்சியில், 2005 முதல் குடும்ப ஓய்வூதியம் பெறுகிறேன்.

மருத்துவ காப்பீடு திட்டத்துக்கு தொகை பிடிக்கப்படுகிறது. 2023, ஜூன் 11ம் தேதி உடல் நலக்குறைவு ஏற்பட்டு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றேன்.

இதற்காக, ஒரு லட்சத்து, 85 ஆயிரத்து, 890 ரூபாய் செலவு செய்தேன். இத்தொகையை காப்பீடு நிறுவனத்தில் இருந்து பெறுவதற்கு, 2023 ஜூலை, 4ல் ஆவணங்களை இணைத்து மாநகராட்சியில் மனு செய்தேன்.

இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் காப்பீடு நிறுவனத்தில் இருந்து பணம் வரவில்லை. அத்தொகையை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கூறியுள்ளார்.

துணை கமிஷனர் குமரேசன், உதவி நகர் நல அலுவலர் பூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மொத்தம், 59 மனுக்கள் பெறப்பட்டு, துறை ரீதியான நடவடிக்கைக்கு, அதிகாரிகளுக்கு பரிந்துரைத்தனர்.






      Dinamalar
      Follow us