/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வேலைவாய்ப்பு திறன் பயிற்சி வகுப்பு
/
வேலைவாய்ப்பு திறன் பயிற்சி வகுப்பு
ADDED : செப் 04, 2024 11:24 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி: பொள்ளாச்சி சக்தி தொடர்பியல் மேலாண்மை கல்லுாரியில், மேலாண்மை துறை மாணவர்களுக்கான 'வேலைவாய்ப்புத் திறன்' பயிற்சி வகுப்பு, துவக்க விழா கல்லுாரி வளாகத்தில் நடந்தது. வரும், 14ம் தேதி வரை பயிற்சி வகுப்பு நடக்கிறது.
கல்லுாரி இயக்குனர் சர்மிளா வரவேற்றார். யூத் கார்ப் சொல்யூசன் நிறுவனர் மணிகண்டன் சுந்தரேசன் கலந்து கொண்டு, மேலாண்மை மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டிய ஆளுமை திறன், தகவல் தொடர்பு கொள்ளும் திறன், நேர்காணலை எளிதாக எதிர்கொள்ளுதல் குறித்து விளக்கிப் பேசினார். இதற்கான ஏற்பாடுகளை, பேராசிரியர் குந்தவி நப்பின்னை செய்திருந்தார்.