sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

அனைவருக்கும் சமமான கல்வி; பா.ஜ., கையெழுத்து இயக்கம்

/

அனைவருக்கும் சமமான கல்வி; பா.ஜ., கையெழுத்து இயக்கம்

அனைவருக்கும் சமமான கல்வி; பா.ஜ., கையெழுத்து இயக்கம்

அனைவருக்கும் சமமான கல்வி; பா.ஜ., கையெழுத்து இயக்கம்


ADDED : மார் 06, 2025 11:57 PM

Google News

ADDED : மார் 06, 2025 11:57 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; அனைவருக்கும் சமமான கல்வி கிடைக்க வேண்டும் அதை நோக்கி தமிழகம் செல்ல வேண்டும் அதற்கு தமிழகம் மும்மொழிக்கொள்கையை ஏற்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நேற்று காந்திபுரம் சிக்னல் அருகே பா.ஜ.,சார்பில் மக்களிடம் கையெழுத்துப்பெறும் நிகழ்வு நடந்தது.

தேசிய கல்விக் கொள்கையால் தமிழ், ஆங்கிலம் தவிர கூடுதலாக நாம் விரும்பும் மொழியை எளிதாக மாணவர்கள் கற்கலாம். சர்வதேச தரத்திலான கல்வி எளிதாக கிடைக்கும், ஐந்தாம் வகுப்பு வரை தாய்மொழியில் கற்கலாம்.

ஏழை, பணக்காரர் என்ற ஏற்றத்தாழ்வுகள் இன்றி அனைவருக்கும் சமமான கல்வி கிடைக்கும். வசதி படைத்த குழந்தைகளுக்கு கிடைக்கும் கல்வி அனைத்து தரப்பு மக்களுக்கும் எளிதாக கிடைக்கும். இந்த விஷயங்களை முன்னிறுத்தி கையெழுத்து பெறும் நிகழ்ச்சி நடந்தது.திரளான மக்கள் பங்கேற்றனர்.

மாவட்ட தலைவர் ரமேஷ் குமார் தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் முருகானந்தம், நீலகிரி மாவட்ட பொறுப்பாளர் நந்தகுமார், முன்னாள் மண்டல் தலைவர் சவுந்தர்ராஜ், மாவட்ட துணை தலைவர் ஜெயதிலகா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us