sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

விவசாயிகளின் விபரம் பதிவேற்றம் : 31ம் தேதி வரை நீட்டிப்பு

/

விவசாயிகளின் விபரம் பதிவேற்றம் : 31ம் தேதி வரை நீட்டிப்பு

விவசாயிகளின் விபரம் பதிவேற்றம் : 31ம் தேதி வரை நீட்டிப்பு

விவசாயிகளின் விபரம் பதிவேற்றம் : 31ம் தேதி வரை நீட்டிப்பு


ADDED : மார் 04, 2025 12:25 AM

Google News

ADDED : மார் 04, 2025 12:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சூலுார்:

விவசாயிகளின் விபரங்கள் பதிவேற்றும் பணி, வரும் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மத்திய, மாநில அரசுகளின் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த அனைத்து திட்டங்களின் பயன்களை எளிமையாகவும், விரைவாகவும் விவசாயிகள் பெற, அவர்களின் நிலம் குறித்த விபரங்கள் சேகரித்து, தனித்துவ அடையாள எண் வழங்கும் பணி நடந்து வருகிறது. சூலுார் மற்றும் சுல்தான்பேட்டையில், கடந்த, 10ம் தேதி முதல் இப்பணி நடக்கிறது.

இதுகுறித்து வேளாண் அதிகாரிகள் கூறியதாவது:

விவசாயிகளுக்கு தனித்துவ அடையாள எண் வழங்க, தரவுகள் பதிவேற்றம் செய்யும் பணி நடக்கிறது. ஆதார் எண், பட்டா விபரம், ஆதாருடன் இணைக்கப்பட்ட செல்போன் ஆகியவற்றுடன் சென்று அந்தந்த ஊர்களில் நடக்கும் முகாமில் பதிவு செய்து கொள்ளலாம். அருகில் உள்ள அரசு பொது இ.சேவை மையத்திலும் கட்டணமின்றி பதிவு செய்து கொள்ளலாம். வரும், 31ம் தேதி கடைசி நாளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்குள், இதுவரை பதிவு செய்யாத விவசாயிகள் பதிவு செய்து பயன் பெறலாம்.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us