sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 09, 2026 ,மார்கழி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

குழந்தையை கொளுத்த முயன்ற தந்தை கைது

/

குழந்தையை கொளுத்த முயன்ற தந்தை கைது

குழந்தையை கொளுத்த முயன்ற தந்தை கைது

குழந்தையை கொளுத்த முயன்ற தந்தை கைது


ADDED : மே 25, 2024 06:08 AM

Google News

ADDED : மே 25, 2024 06:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை : கோவை சாய்பாபா காலனி அண்ணா நகரில் வசிப்பவர் பச்சையன், 39; கூலி தொழிலாளி; இவரது மனைவி ஆர்த்தி. இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. பச்சையன் அடிக்கடி குடித்து விட்டு போதையில் தனது மனைவியிடம், தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். ஆர்த்தி கோபித்துக்கொண்டு, மதுரையில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். குழந்தையை அழைத்து செல்லவில்லை.

நேற்று முன்தினம் பச்சையன், மனைவியை போனில் தொடர்பு கொண்டு கோவைக்கு அழைத்தார். அதற்கு அவர் மறுத்ததாக தெரிகிறது. ஆத்திரமடைந்த பச்சையன், குழந்தை மீது கெரசின் ஊற்றி கொளுத்தி விடுவதாக மிரட்டல் விடுத்தார். ஆர்த்தி சாய்பாபா காலனியில் வசிக்கும் தனது உறவினரிடம் தெரிவித்துள்ளார்.

ஆர்த்தியின் உறவினர் பொன்னி, 50, வேறு சிலருடன் பச்சையன் வீட்டுக்கு சென்று குழந்தையை மீட்டனர். பொன்னி புகாரின் படி, சாய்பாபா காலனி போலீசார் வழக்குப்பதிந்து பச்சையனை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.-






      Dinamalar
      Follow us