sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

வாட்டர்பால்ஸ் எஸ்டேட் கோவில்களில் திருவிழா

/

வாட்டர்பால்ஸ் எஸ்டேட் கோவில்களில் திருவிழா

வாட்டர்பால்ஸ் எஸ்டேட் கோவில்களில் திருவிழா

வாட்டர்பால்ஸ் எஸ்டேட் கோவில்களில் திருவிழா


ADDED : மார் 09, 2025 11:09 PM

Google News

ADDED : மார் 09, 2025 11:09 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வால்பாறை; வால்பாறை அடுத்துள்ளது வாட்டர்பால்ஸ் எஸ்டேட் இரண்டாம் பிரிவு. இங்குள்ள விநாயகர், பத்ரகாளியம்மன், மாரியம்மன், முனீஸ்வரன், மதுரைவீரன், கருப்பசாமி, மாடசாமி கோவிலின், 62வது ஆண்டு திருவிழா கடந்த, 28ம் தேதி காலை கொடியேற்றத்துடன் துவங்கியது.

முன்னதாக காலை, 5:00 மணிக்கு கணபதி ேஹாமமும், 6:00 மணிக்கு அபிேஷக, அலங்கார பூஜையும் நடந்தது.

தொடர்ந்து நடைபெறும் விழாவில் கடந்த, 7ம் தேதி இரவு, 8:30 மணிக்கு விநாயகர் கோவிலில், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

தொடர்ந்து பத்ரகாளியம்மன், மாரியம்மன் ஆகிய பூஜை கூடை ஆபரண பெட்டியுடன் கோவில்களில் ஆற்றங்கரைக்கு சென்று, இரவு, 12:00 மணிக்கு சக்திகரகம் எடுத்து பக்தர்கள் ஊர்வலமாக கோவிலுக்குச்சென்றனர்.

விழாவில் நேற்று முன் தினம் காலை, 10:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிேஷக, அலங்காரபூஜை நடைபெற்றது. பின் காலை, 11:00 மணிக்கு பக்தர்கள் அலகு பூட்டி கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர்.

தொடர்ந்து மதியம், 1:00 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

இதே போல், வாட்டர்பால்ஸ் எஸ்டேட் முதல் பிரிவு (பழையகாடு) சக்திமாரியம்மன் கோவிலின், 73ம் ஆண்டு திருவிழா கடந்த, 28ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

விழாவில் நேற்று முன் தினம் காலை 10:00 மணிக்கு பக்தர்கள் அலகு பூட்டியும், பூவோடு எடுத்தும் கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர். தொடர்ந்து மதியம், 1:00 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

விழாவிற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us