sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

தீ விபத்து முன்னெச்சரிக்கை :வனப்பகுதியில் ரோந்து

/

தீ விபத்து முன்னெச்சரிக்கை :வனப்பகுதியில் ரோந்து

தீ விபத்து முன்னெச்சரிக்கை :வனப்பகுதியில் ரோந்து

தீ விபத்து முன்னெச்சரிக்கை :வனப்பகுதியில் ரோந்து


ADDED : ஏப் 26, 2024 11:26 PM

Google News

ADDED : ஏப் 26, 2024 11:26 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம் வனப்பகுதிகளில் தீ விபத்து ஏற்படாமல் இருக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 2 குழுக்கள் வாயிலாக சுழற்சி முறையில், வனப்பகுதிகளில் 24 மணி நேரமும் ரோந்து மேற்கொள்ளப்படுவதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

மேட்டுப்பாளையம் வனச்சரகம் சுமார் 9 ஆயிரம் எக்டேர் பரப்பில் அமைந்துள்ளது. குன்னுார், கோத்தகிரி மலைப்பகுதிகள், உட்பட மரங்கள் நிறைந்த அடர்ந்த வனப்பகுதிகள் இந்த வனச்சரகத்தில் உள்ளன.

தற்போது நிலவி வரும் கடுமையான வெயில் காரணமாக வனப்பகுதிகளில் வறட்சி நிலவி வருகிறது. இதனால் வனப்பகுதிகளில் தீ விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. இதனை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

இதுகுறித்து மேட்டுப்பாளையம் வனச்சரகர் ஜோசப் ஸ்டாலின் கூறுகையில், ''மேட்டுப்பாளையம் வனப்பகுதிகளில் தீ விபத்து ஏற்படாமல் இருக்க, வனப்பகுதிகளை கண்காணிக்க 2 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுக்கள் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் செல்கின்றன.

தமிழகம், கேரளாவில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிக அளவில் ஊட்டிக்கு சுற்றுலா வருகின்றனர். அவ்வாறு செல்லும் சுற்றுலா பயணிகள் பீடி, சிகரெட் போன்றவற்றை பற்ற வைத்துவிட்டு, வனப்பகுதியில் வீசக்கூடாது,'' என்றார்.

---






      Dinamalar
      Follow us