/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சுகுணா கல்லுாரியில் முதலாமாண்டு விழா
/
சுகுணா கல்லுாரியில் முதலாமாண்டு விழா
ADDED : ஜூலை 06, 2024 12:34 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை;கோவை நேரு நகரிலுள்ள, சுகுணா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி ஆண்டு துவக்கவிழா , முதலாமாண்டு மாணவர்கள் அறிமுக விழா, நேற்று கல்லுாரியில் நடந்தது. முதல்வர் ராஜ்குமார் தலைமை வகித்து வரவேற்றார்.
இதில், மாணவர்கள் பாடத்திட்டங்களை சார்ந்த, திறன்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். சவால்கள் நிறைந்த உலகில், தொழில்நுட்பம், தொடர்பு திறன்களின் அவசியம் குறித்து, மாணவர்களுக்கு வல்லுநர்கள் வலியுறுத்தினர்.
நிகழ்வில், சுகுணா தொண்டு அறக்கட்டளையின் செயலாளர் ஸ்ரீகாந்த் கண்ணன், கல்லுாரியின் செயலாளர் சேகர், தன்னம்பிக்கை பேச்சாளர் பிரியா செந்தில் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.