ADDED : ஜூலை 27, 2024 01:55 AM
அ நிறம் | அளவு
கோவை;மண் மற்றும் நீர்வள பாதுகாப்புப் பொறியியல்துறை, வேளாண் பொறியியல் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில், கோவையில் துல்லிய வேளாண் மேம்பாட்டு மையத்தின் கீழ், 'துல்லிய விவசாயத் தொழில்நுட்பங்கள்' என்ற, ஏழு நாட்கள் பயிற்சி வேளாண் பல்கலையில் நடந்தது.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து, 35க்கும் மேற்பட்ட விவசாயிகள் பயிற்சியில் பங்கேற்றனர். பதிவாளர் தமிழ்வேந்தன் பயிற்சியை துவக்கி வைத்தார்.
