sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

20வது முறையாக இ.இ.பி.சி., விருது பெற்ற சி.ஆர்.ஐ., பம்ப்!

/

20வது முறையாக இ.இ.பி.சி., விருது பெற்ற சி.ஆர்.ஐ., பம்ப்!

20வது முறையாக இ.இ.பி.சி., விருது பெற்ற சி.ஆர்.ஐ., பம்ப்!

20வது முறையாக இ.இ.பி.சி., விருது பெற்ற சி.ஆர்.ஐ., பம்ப்!


ADDED : ஆக 01, 2024 01:47 AM

Google News

ADDED : ஆக 01, 2024 01:47 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை : பொறியியல் துறை ஏற்றுமதியில், தொடர்ந்து முன்னணி வகித்து வரும் சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் நிறுவனம், பொறியியல் ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகத்தின் கவுரவமிக்க இ.இ.பி.சி., விருதை, 20வது முறையாக வென்றுள்ளது.

புதுச்சேரியில் நடந்த, தென் மண்டல அளவிலான 45வது மற்றும் 46வது பொறியியல் ஏற்றுமதி விருது வழங்கும் விழாவில், இந்த விருது வழங்கப்பட்டது.

சர்வதேச சந்தையில் இந்தியாவின் பெருமையை உணர்த்தும் வகையில், சிறப்பாக செயல்படுவதற்காக இந்த விருது, சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் தொழில் வர்த்தக துறை அமைச்சகத்தின் வர்த்தக துறை இணை செயலாளர் விமல் ஆனந்த் விருதை வழங்கினார். சி.ஆர்.ஐ., பம்ப்ஸ் நிறுவனத்தின் தலைமை சந்தை பிரிவு அதிகாரி பூபதி, விருதை பெற்றுக் கொண்டார்.






      Dinamalar
      Follow us