sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

4வது முறையாக பில்லுார் நிரம்பியது

/

4வது முறையாக பில்லுார் நிரம்பியது

4வது முறையாக பில்லுார் நிரம்பியது

4வது முறையாக பில்லுார் நிரம்பியது


ADDED : ஜூலை 31, 2024 02:17 AM

Google News

ADDED : ஜூலை 31, 2024 02:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம்;பில்லூர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால், பில்லூர் அணை நான்காவது முறையாக நிரம்பியது. இதனால் பவானி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

நீலகிரி மற்றும் கேரளாவில் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணைக்கான நீர் வரத்து அதிகரித்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 15 ஆயிரம் முதல் 18 ஆயிரம் கன அடி வரை நீர் வருகிறது.

இதையடுத்து நேற்று முன் தினம் இரவு 100 அடி கொள்ளளவு கொண்ட பில்லூர் அணை நிரம்பியது. இதன் வாயிலாக நடப்பாண்டில் நான்காவது முறையாக நிரம்பியது என்பது குறிப்பிடத்தக்கது.

பில்லூர் அணையின் பாதுகாப்பு கருதி, நான்கு மதகுகளும் திறக்கப்பட்டு உபரி நீர் பவானியாற்றில் வெளியேற்றப்படுகிறது. இதனால் பவானி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது.

பவானியாற்று கரையோர பகுதிகளான மேட்டுப்பாளையம் மற்றும் சிறுமுகை பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.--






      Dinamalar
      Follow us