/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவையில் 55 கோடி ரூபாயில் கோர்ட் கட்டடத்துக்கு அடிக்கல்
/
கோவையில் 55 கோடி ரூபாயில் கோர்ட் கட்டடத்துக்கு அடிக்கல்
கோவையில் 55 கோடி ரூபாயில் கோர்ட் கட்டடத்துக்கு அடிக்கல்
கோவையில் 55 கோடி ரூபாயில் கோர்ட் கட்டடத்துக்கு அடிக்கல்
ADDED : மார் 04, 2025 06:26 AM

கோவை; கோவையில், 55 கோடி ரூபாய் செலவில், புதிய கோர்ட் கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா, நேற்று நடந்தது.
கோவை அரசு கலைக்கல்லுாரி ரோட்டிலுள்ள, ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், 47க்கும் மேற்பட்ட கோர்ட்கள் செயல்பட்டு வருகின்றன.
10 ஏக்கர் பரப்புடைய இந்த வளாகத்தில், அதிக கட்டடங்கள் இருப்பதால், மக்கள் நடமாட, வாகனங்கள் நிறுத்த போதிய வசதியின்றி இட நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
புதிய கோர்ட் திறக்க ஐகோர்ட் அனுமதி அளித்தாலும், இடப்பற்றாக்குறையால் சிக்கல் ஏற்பட்டது.சிறப்பு நீதிமன்றங்களை, வேறு இடங்களுக்கு மாற்றினால், கோர்ட் வளாகத்தில் இடப்பற்றாக்குறை பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் என்று, அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.
அதை தொடர்ந்து, கோவை கலெக்டர் அலுவலகம் அருகேயுள்ள குதிரை வண்டி கோர்ட் வளாகத்தில், 14 நீதிமன்றங்கள் செயல்படும் வகையில், புதிய கட்டடம் கட்ட 54.96 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, கடந்தாண்டு நவ., 5ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது. முதற்கட்டமாக, 4.5 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டது.
இதையடுத்து, புதிய கோர்ட் கட்டட அடிக்கல் நாட்டுவிழா மற்றும் பூமிபூஜை நேற்று நடந்தது. கோவை மாவட்ட முதன்மை நீதிபதி விஜயா அடிக்கல் நாட்டினார்.
கோவை கலெக்டர் பவன்குமார், மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், வக்கீல்கள் சங்க தலைவர் பாலகிருஷ்ணன் மற்றும் அனைத்து நீதிபதிகள், கோர்ட் ஊழியர்கள், வக்கீல்கள் பங்கேற்றனர்.